தென்சீனா கடலில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை உள்ளது- அமெரிக்காவுக்கு சீனா பதிலடி
பெஜ்யிங்: தென்சீனா கடலில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு உரிமை இருக்கிறது என அமெரிக்காவுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
Recommended Video
தென்சீனா கடல் முழுமையும் தங்களுக்கே சொந்தம் என்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால் தென் சீனாவை ஒட்டிய வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த எதிர்ப்புகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் தென்சீனா கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி கடற்படை தளத்தை அமைத்து வருகிறது சீனா. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்சீனா கடற்பரப்பில் பிற நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவும் கோதாவில் குதித்துள்ளது.
தென்சீனா கடல் விவகாரத்தில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுகின்றன. தென்சீனா கடலை ஆக்கிரமித்து ஒரு கடல் சாம்ராஜ்யத்தை நடத்த சீனா முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இதற்கு தற்போது பதில் அளித்துள்ள சீனா, தென் சீனா கடற்பரப்பில் எங்களுக்கு 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை உள்ளது. தென் சீனா கடற்பரப்பின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தென்சீனா கடல் மீதான உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என சீனா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications