Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேதமான வீடுகள்.. முடங்கிய ரயில் சேவை.. சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஷாக்கில் மக்கள்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் நேற்று நள்ளிரவில் 7.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில் பொதுமக்கள் காயமடைந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் என்பது அடிக்கடி ஏற்படுகிறது.

China Earthquake: Several injuries after some houses collapsed due to earthquake and train services affected

இத்தகைய சூழலில் தான் நேற்று நள்ளிரவில் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் என்பது டெல்லி என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டது.

அதாவது சீனாவின் தெற்கு பகுதியில் ஜின்ஜியாங் மாகாணம் உள்ளது. இங்கு தான் நேற்று நள்ளிரவு 11.39 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் குலுங்கி உள்ளன. இதனால் வீட்டில் தூங்கிய மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்றனர்.

அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் குலுங்கியதோடு, உருண்டு விழுந்ததாக சிலர் தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளது. வீடுகளில் விரிசல் என்பது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 27 ரயில்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக நிறுத்தப்பட்டது.

இருப்பினும் காயமடைந்தவர்கள் எத்தனை பேர், யாராவது படுகாயம் அடைந்து உள்ளனரா? என்பது தொடர்பான எந்த தகவலும் வெளிவரவில்லை. இதற்கிடையே தான் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த தேசிய நிலஅதிர்வு மையத்தில் பதிவாகி உள்ளது. இதுபற்றி அந்த மையம், ‛‛சீனாவின் தெற்கு ஜின்ஜியாங்கில் நள்ளிரவு 11.39 மணிக்கு 7.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் நிலை கொண்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் நேற்றைய தினம் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லி என்சிஆர் பகுதியில் இரவு 11.45 மணி முதல் 12 மணிக்குள் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக டெல்லியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+