35 வருடங்களுக்கு பிறகு ஒரு குழந்தை கொள்கைக்கு சீனா முற்றுப்புள்ளி! 2 குவா, குவாக்களுக்கு ஓ.கே
பீஜிங்: 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரேயொரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள சீனா, இப்போது 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதியளித்துள்ளது.
சீனாவின் இந்த கொள்கை மாற்றம் பற்றி அரசின் ஜினுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகிலேயே அதிகம் மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இதனால் அங்கு ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் 35 வருடங்களுக்கு முன்பு கட்டாயமாக்கப்பட்டது.
இதனால், அந்த நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென வளர்ந்து உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாறியது. அதேநேரம், நல்ல செயல்களில் சில பின்விளைவுகளும் இருக்கும் என்பதைப்போல இதிலும் ஒரு சிக்கல் எழுந்தது.
வயதானவர்கள் சீனாவில் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆண்-பெண் பாலின விகிதாச்சாரத்தில் கடுமையான ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. இளைஞர்கள் குறைந்துவிட்டதால், நாட்டில் உழைக்கும் சக்தி பெருமளவு குறைந்து வருகிறது.
இப்பிரச்சினை குறித்து, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 4 நாட்களாக தலைநகர் பெய்ஜிங்கில் கூட்டம் நடத்தி விவாதித்தது. இதில் சீன பொருளாதார வளர்ச்சி சரிவடையும் வாய்ப்பு பற்றி ஆய்வாளர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதனையடுத்து, ஒரு குழந்தை கொள்கைக்கு முடிவு கட்ட முடிவு செய்யப்பட்டது. இனிமேல் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு அனைத்து அரசு சலுகைகளும் தரப்படும்.
2013ம் ஆண்டில், குறைந்த அளவில் சலுகைகள் அளிக்கப்பட்டு, நகர்ப்புற தம்பதியினர் மட்டும் 2வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நிறைய பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications