சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்... முழு வீச்சில் லாக்டவுன்- உலகம் முழுவதும் பரவுமோ?
பீஜிங்: சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பல மாகாணங்கள் லாக்டவுனில் முடக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா புதிய அலை தாக்குமோ என்கிற அச்சம் நிலவுகிறது.
2019-ம் ஆண்டு சீனாவில் இருந்துதான் கொரோனா எனும் வைரஸ் பரவியது. கடந்த 3 ஆண்டுகளாக உலகை ஆட்டி படைத்து வருகிறது கொடிய கொரோனா வைரஸ்.
உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. தற்போதைய நிலையில் உலகின் பல பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் முழு வீச்சில் போடப்பட்டு வருகின்றன.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 458,522,138. கொரோனாவால் இதுவரை 6,066,045 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 391,588,537 பேர் மீண்டும் உள்ளனர். தற்போதைய நிலையில் தென்கொரியாவில்தான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது. தென்கொரியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சுமார் 3 லட்சமாக உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் சீனாவில் மீண்டும் அதி வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் ஏற்கனவே பல்வேறு உருமாற்றம் அடைந்த நிலையில் சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் என்ன வகை என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சீனாவின் பல மாகாணங்களும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் லாக்டவுனை முழு வீச்சில் அமல்படுத்தி இருக்கின்றன.
இதனால் உலகின் பிற பகுதிகளுக்கும் சீனாவின் புதிய கொரோனா வைரஸ் பரவுமோ என்கிற அச்சம் உருவாகி உள்ளது. இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸ் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்கிற நம்பிக்கையை மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications