தென் சீன கடலில் பாதாள சுரங்கம்.. அம்பலமானது சீனாவின் பயங்கர ஆயுதங்கள், போர் விமானங்கள்
பெய்ஜிங்: தென் சீன கடலில் பாதாள சுரங்கங்களில் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை சீனா பதுக்கி வைத்திருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியிருப்பது உண்மை என்று நிரூபணம் ஆகியுள்ளது. செயற்கைகோள் ஆதாரங்களில் இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
உலகின் மிக முக்கியமான கடற்படை வழித்தடமான தென் சீன கடல் பகுதி முழுவதையும் தனக்கே சொந்தம் என்று சீனா உரிமை கோரி வருகிறது.
ஆனால் சீனாவின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா, தைவான், மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. இதனால் பல ஆண்டுகளாக தென் சீன கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது

தென் சீன கடல்
தென் சீன கடல் பகுதியில் உள்ள தீவுகள் இயற்கை வளம் மிகுந்தவை ஆகும். இந்த பகுதிதான் உலக நாடுகளின் வர்த்தக ரீதியான கடல்வழி பயணத்துக்கு முக்கியமான வழித்தடமாக உள்ளது. இதன் காரணமாகவே சீனா தென் சீனகடல் பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்து வருகிறது,

அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்
சீனா, ஹாங்காங்கில் இருந்து 470 கி.மீ தூரத்தில் தென் சீன கடல் பகுதிகளில் உள்ள ஹைனான் தீவில் மிகப்பெரிய யூலின் கடற்படை தளத்தை அமைத்துள்ளது. அந்த தீவில் சீனா தனக்கு சொந்தமான அதிபயங்கரமான போர்க்கப்பல்கள், அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை பதுக்கி வைத்து வருகிறது குறிப்பாக இங்கு சாங்க்093 என்ற அணு ஆயுத கப்பல்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல்கள் எதுவும் அமெரிக்காவின் ரேடார் பார்வையில் சிக்கியது இல்லை.

இந்தியா கூற்று உண்மை
ஏனெனில் பாதாளம் அமைத்து அதில் கடற்படை தளத்தை உருவாக்கியிருக்கும் என இந்தியா சந்தேகம் தெரிவித்து வந்தது. இந்த சந்தேகத்தையே இப்போது அமெரிக்காவும், இங்கிலாந்தும் முன்வைத்துள்ளன. இதனிடையே இந்தியாவின் கூற்று உண்மை என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

செயற்கை கோள் படம்
அமெரிக்காவைச் சேர்ந்த பிளானட் லேப் என்ற தனியார் செயற்கைகோள் நிறுவனம் யுலின் கடற்படை தளம் அருகே சீனா பாதாள கடற்படை தளத்தை அமைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளது.. இந்த பாதாள சுரங்கத்துக்குள் சாங்க் 093 நீர் மூழ்கி கப்பல் நுழைவதை தனது செயற்கை கோள் மூலம் படம் பிடித்துள்ளது. இதனால் சீனாவின் கடற்படை ரகசியம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவுக்கு வார்னிங்
இதனிடையே தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கத்தை நிலைநிறுத்த கிங்ஹாய் மாகாணத்தில் இருந்து சீனா பாலிஸ்டிக் ஏவுகணையான டி.எஃப் -26 பி மற்றும் மற்றொரு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான டி.எஃப் -21 டி ஆகியவற்றை ஜெஜியாங் மாகாணத்திலிருந்து வீசி சோதித்து பார்த்துள்ளது. இது அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications