இம்ரான் கான் முகத்தில் கரியை பூசும் உலக நாடுகள்.. காஷ்மீர் விவகாரத்தில் ஓங்கி கதவை சாத்திய சீனா!
Recommended Video
பெய்ஜிங்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து ஐநா சாசனத்தின்படியும் 1972-இல் சிம்லா ஒப்பந்தத்தின்படியும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு சீனா, பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. அது போல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால் அது மாநில அந்தஸ்தையும் இழந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிகம் வசிக்கும் காஷ்மீரை அழித்துவிட்டு பெரும்பான்மையினராக மாற்ற முயற்சிக்கிறது இந்தியா என இம்ரான்கான் குற்றம்சாட்டியிருந்தார்.

மூக்கறுபடுவது
இதையடுத்து இந்தியாவுடன் தூதரக உறவுகளை துண்டித்துக் கொள்வது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் பஞ்சாயத்தை வைப்பதும் மூக்கறுபடுவதுமாக இருக்கிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்ட பாகிஸ்தானிடம் சிம்லா ஒப்பந்தத்தின் படி காஷ்மீர் விவகாரத்தை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே தீர்வு காண வேண்டும். இதில் மூன்றாவது நபர் தலையிட முடியாது என ஐநா பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துவிட்டது.

சீன அமைச்சர்
சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என எந்த ஒரு இஸ்லாமிய நாடும் இம்ரான்கானின் அழைப்பிற்கு செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான், சீனாவின் உதவியை நாடியது. சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்க் ஈயை பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மமூத் குரேஷி சந்தித்தார்.

அமைதி தீர்வு
அப்போது வாங்க் ஈ கூறுகையில் காஷ்மீர் விவகாரம் என்பது நீண்ட நாள் பிரச்சினையாகும். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையான முடிவை எடுத்திருப்பது கவலையை அளித்துள்ளது. எனவே இந்த பிரச்சினை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் சாசனத்தின்படியும் இரு தரப்பு ஒப்பந்தத்தின்படியும் முடிவு முறையாக அமைதியாக தீர்வு காண வேண்டும்.

கையை விரித்த சீனா
தன்னிச்சையான முடிவுகள் காஷ்மீர் விவகாரத்தை சிக்கலில் கொண்டு செல்லும் என்பது சீனாவின் கருத்தாகும். பாகிஸ்தானை சீனா ஆதரிக்கும். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது பதற்றத்தை அதிகரிப்பது உள்ளிட்ட வேலைகளை தன்னிச்சையாக செயல்படுவதை இந்தியா தவிர்ப்பதுதான் முதல் முக்கிய வேலையாகும் என சீனா கையை விரித்து விட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications