ஹை அலர்ட்.. லடாக்கில் சீனா உருவாக்கிய புதிய "ஹாட்ஸ்பாட்".. மொத்தமாக படைகளை களமிறக்கிய இந்தியா!

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக் எல்லையில் டெப்சாங் பகுதியில் தற்போது சீனா கவனம் செலுத்த தொடங்கி உள்ள நிலையில், இந்தியா அங்கு தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இதனால் அங்கு புதிய ஹாட்ஸ்பாட் பகுதி உருவாகி உள்ளது.

Recommended Video

    India China Border-ல் விறுவிறுப்பாக சாலை அமைக்கும் India | Master Plan

    லடாக் எல்லையில் இதுநாள் வரை மொத்தம் மூன்று ஹாட்ஸ்பாட் பகுதியில் நிலவி வந்தது. அதன்படி சீனாவின் கவனம் முழுக்க கல்வான், பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்தது. அங்குதான் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.

    ஆனால் தற்போது லடாக்கில் மேல் உச்சியில் இருக்கும் டெப்சாங் பகுதியில் சீனா கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. சீனா கவனம் செலுத்தும் பகுதிகளில் இது மிக முக்கியமான பகுதியாகும்.

    மிக முக்கியம்

    மிக முக்கியம்

    இந்தியா - சீனா எல்லையில் அக்சை சின் பகுதியில் இந்த டெப்சாங் இருக்கிறது. இந்த டெப்சாங் என்பது இந்தியாவின் DBO விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ளது. இங்குதான் இந்தியாவின் விமானப்படை தளமான Daulat Beg Oldie இருக்கிறது. இதைதான் DBO என்று அழைப்பார்கள். உலகில் மிக உயரமான மலை பகுதியில் இருக்கும் விமானப்படை தளம் இதுதான். இதைதான் சீனா குறி வைத்து உள்ளது.

    சீனா தடுக்கிறது

    சீனா தடுக்கிறது

    இந்தியா சார்பாக இந்த விமான படைத்தளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் சாலையை தடுக்கும் வகையில் சீனா அங்கு படைகளை குவித்து வருகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த விமான படைத்தளத்தில் இருந்து 23 கிமீ தூரத்தில் சீனா படைகளை குவித்து வருகிறது. இன்னொரு பக்கம் டெப்சாங் மலையில் இருந்து வெறும் 21 கிமீ தூரத்தில் சீனா தனது படைகளை குவித்து வருகிறது.

    எத்தனை வீரர்கள்

    எத்தனை வீரர்கள்

    இந்த இடத்தில் மட்டும் மொத்தம் சீனாவின் வீரர்கள் 10 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அங்கு வலிமையான ஆயுதங்கள், நவீன போர் கருவிகளை சீனா களமிறக்கி உள்ளது. முக்கியமாக டேங்குகளை சீனா களமிறக்கி உள்ளது. இது போருக்கான அறிகுறி ஆகும். வேண்டும் என்றே புதிய ஹாட்ஸ்பாட் ஒன்றை சீனா இந்திய எல்லையில் உருவாக்கி உள்ளது.

    இந்தியா கவனம்

    இந்தியா கவனம்

    இதில் இந்தியாவிற்கு என்ன சிக்கல் என்றால், இதனால் எல்லையில் இந்தியா பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதாவது எல்லையில் இந்தியா எல்ஏசி அருகே நடத்தும் ரோந்து பணிகளை தடுக்கும் வகையில் சீனா சரியாக தனது படைகளை குவித்து உள்ளது. சரியாக அந்த இடத்தை குறி வைத்து சீனா களமிறங்கி உள்ளது. இந்தியாவின் இந்த போக்கு கண்டிப்பாக திட்டமிட்டு நடக்கிறது என்கிறார்கள்.

    இந்தியாவும் படைகள் குவிப்பு

    இந்தியாவும் படைகள் குவிப்பு

    இதை தொடர்ந்து தற்போது இந்தியாவும் அங்கே படைகளை குவித்து வருகிறது. முக்கியமாக டெப்சாங் பகுதியில் இந்தியா மூன்று டிவிஷன் படைகளை களமிறக்கி உள்ளது. ஒரு டிவிசனுக்கு 12 ஆயிரம் வீரர்கள் இருப்பார்கள். இதன் மூலம் அங்கு மட்டும் 36000 வீரர்களை இந்தியா களமிறக்கி உள்ளது. சீனா இதை எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அங்கு சீனா நவீன ஆயுதங்களையும் களமிறக்கி உள்ளது.

    விமானப்படை

    விமானப்படை

    அதேபோல் அங்கு இந்தியாவின் விமானப்படையும் தீவிரமான ரோந்து பணிகளை செய்து வருகிறது. இதற்காக சுகோய் மற்றும் மிக் ரக விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது. அங்கு விமானப்படை ஹை அலர்ட்டில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை இந்திய விமானப்படை தொடர்ந்து சோதனைகளையும், ரோந்துகளையும் செய்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+