ஸ்டெம்செல்தெரபி மூலம் நெற்றியில் வளர்ந்த ‘புதிய மூக்கு’: சீன மருத்துவர்கள் சாதனை
பெய்ஜிங்: சீனாவில், விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, மூக்கில் பாதிப்பு ஏற்பட்ட நோயாளியின் உடலில், "ஸ்டெம்செல் தெரபி' முறையில், புதிய மூக்கை, சீன மருத்துவர்கள் சாதனைப் புரிந்துள்ளனர்.
ஒருவகைக் குறிப்பிட்ட பல்லி இனத்திற்கு மட்டுமே இழந்த உறுப்புகளை மீண்டும் வளர்த்துக் கொள்ளும் விஷேச உடலமைப்பு உண்டு. அதனை முன்மாதிரியாக வைத்து மனிதர்களுக்கும், இழந்து போன உறுப்புகளை மீண்டும் வளர்க்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஸ்டெம்செல் தெரபி மூலம், சீனாவில் மூக்கில் பாதிப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவருக்கு அவரின் நெற்றியின் மீதே புதிய மூக்கு வளர்த்து சீன மருத்துவர்கள் மருத்துவ உலகில் புதியதொரு சாதனை புரிந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மூக்கு....
சீனாவைச் சேர்ந்த 22 வயது வாலிபரான ஜாவோலியன், கடந்த ஆண்டு, வாகனத்தில் சென்றபோது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதில், இவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.

மூக்கை அகற்ற ஆலோசனை....
நீண்ட நாட்களாக காயம் ஆறாததால், அதில், நோய் தொற்று உருவானது. இதனால், ஜாவோலியனுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும், நோய் தொற்று குணமாகாததால், அவரின் மூக்கை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் நீக்கப்பட்ட இடத்தில், புதிய மூக்கை பொருத்தவும் அவர்கள் திட்டமிட்டனர்.

ஸ்டெம்செல்தெரபி....
அதன்படி, ஜாவோலியின் உடலில் இருந்து பெறப்பட்ட செல்களின் மூலம், புதிய மூக்கை வளர்க்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட செல்கள், அவரது நெற்றிப் பகுதியில் வைத்து வளர்க்கப்பட்டது.

மூக்காக மாறிய கட்டி....
சில தினங்களிலேயே, நெற்றியில் பெரிய கட்டி ஒன்று உருவானது. அக்கட்டியை மருத்துவர்கள் சில அறுவை சிகிச்சைகள் மூலம் மூக்காக வடிவமைத்துள்ளனர்.

நிஜ மூக்காக...
தற்போது, நோயாளியின் நெற்றியில் 'ஸ்டெம்செல்' சிகிச்சை முறையில் வளர்க்கப்பட்டுள்ள மூக்கு உள்ளது. இன்னும் சில தினங்களில், அறுவை சிகிச்சை மூலம், அந்த மூக்கை நிஜ மூக்கை நீக்கி விட்டு பொருத்தப் போவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications