Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸ்திரேலியாவில் 9 பேரால் தாக்கப்பட்ட இந்திய மாணவரின் நிலைமை கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்திய மாணவரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள கேம்ப்ரிட்ஜ் கல்லூரியில் படித்து வருபவர் மன்ராஜ்விந்தர் சிங்(20). அவர் நேற்று முன்தினம் அதிகாலையில் தனது 2 நண்பர்களுடன் நின்று கொண்டிருக்கையில் ஆப்பிரிக்கர்கள் போன்று இருந்த 8 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணும் அவர்கள் அருகில் வந்துள்ளனர்.

அந்த கும்பல் சிங் மற்றும் அவரது நண்பர்களை தாக்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த செல்போன்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிங் ஆல்பிரட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது சகோதரர் யாத்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 17, 16 மற்றும் 15 வயது சிறுவர்கள் 3 பேரை கைது செய்தனர். அதில் 15 வயது சிறுவன் மட்டும் விடுவிக்கப்பட்டான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+