கொரோனா வைரஸ் பாதித்த சீன பெண்ணுக்கு சிசேரியன்.. பிறந்த பெண் குழந்தைக்கு நோய் பாதிப்பு இல்லை
Recommended Video
பெய்ஜிங்: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு நோய் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் வுகான் மாகாணத்தில் ஒரு மீன் சந்தையிலிருந்து கொரோனா என்ற வைரஸ் நோய் கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்நாட்டு மக்களை பாடாய்படுத்தி வருகிறது.
காய்ச்சல், சளி, இருமல், மூச்சுப் பிரச்சினையுடன் தொடங்கும் இது இறுதியில் உறுப்புகளை செயலிழக்க வைத்து உயிர் பலியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அந்த நோய் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 25 நாடுகளில் பரவியுள்ளது.

உலக நாடுகள்
இந்த நோய்க்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் நோய் தீவிரம் அடைந்தால் உயிர் பலி ஏற்படுவது அபாயம் என்பதால் இந்த வைரஸ் நோயை உயிர் கொல்லி என்றும் கூறுகின்றனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்காததால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன.

20 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
இதுவரை சீனாவில் கொரோனா வைரஸுக்கு 425 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சீனாவில் பணி நிமித்தமாகவும் கல்விக்காகவும் மற்ற நாடுகளில் இருந்து சென்றுள்ளோர் அவசர அவசரமாக சீனாவை விட்டு வெளியேறும் நிலை உள்ளது.

கர்ப்பிணி
இந்த நிலையில் சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 30-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.

3 கிலோ எடை
இந்த நோய் தொற்று குழந்தையை பாதிக்காமல் இருக்க அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அந்த பெண்ணுக்கு உடனடியாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தற்போது நலமாக இருக்கிறது. மேலும் அது 3 கிலோ எடையுடன் உள்ளது.

சீரான ரத்த ஓட்டம்
அந்த குழந்தைக்கும் ரத்த பரிசோதனை செய்ததில் அக்குழந்தைக்கு கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்பது உறுதியானது. அந்த பெண்ணையும் குழந்தையையும் மருத்துவர்கள் தனித்தனி அறைகளில் வைத்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அந்த பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் முழுமையாக அவர் குணமடைந்த பிறகே அவரிடம் குழந்தை ஒப்படைக்கப்படும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications