மலேசியாவில் ஜூன் 9 வரை லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மொஹிதீன் யாசின்
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: மலேசியாவில் தற்போது அமலில் உள்ள லாக்டவுன் ஜூன் 9-ந் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மொஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்.
மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை எனப்படுகிற லாக்டவுன் கடந்த மார்ச் 18-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மலேசியாவில் கொரோனா தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் கொரோனாவால் 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது அமலில் உள்ள லாக்டவுன் மே 12-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் மலேசியாவில் ஜூன் 9-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் மொஹிதீன் யாசின் அறிவித்துள்ளார். தற்போதைய கட்டுப்பாடுகளுடன் இது நடைமுறையில் இருக்கும் என்றும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications