தாவூத் இப்ராகிமுக்கு விஷம்? பாகிஸ்தான் மருத்துவமனையில் அனுமதி? இணையத்தில் பரவும் தகவல்கள்
கராச்சி: பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உடல் நிலை குறித்து உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக யூகங்கள் பரவினாலும் இந்த தகவல் தற்போது வரை உறுதி செய்ய முடியவில்லை.
கடந்த 1993- ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 250- க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இறந்தனர். 750- க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். உலக அளவில் நடத்தப்பட்ட மிக மோசமாக கருதப்படும் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம்.

இந்தியா மற்றும் அமெரிக்காவில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருகிறார். தாவூத் இப்ராகிம் தலைக்கு ரூ.25 லட்சம் சன்மானமும் என்.ஐ.ஏ விதித்துள்ளது. இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி லிஸ்டில் முதலிடத்தில் இருக்கும் தாவூத் இப்ராகிம் குறித்து அவ்வப்போது பரபரப்பு செய்திகள் வெளியாகி வரும்.
இந்த நிலையில், தவூத் இப்ராகிமுக்கு அடையாளம் தெரியாத நபரால் விஷம் வைக்கப்பட்டதாகவும் ஆபத்தான நிலையில், கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றன. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமே வெளியாகவில்லை. பாகிஸ்தானின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களான Geo டிவி மற்றும் டான்(dawn) ஆகியவையும் இது குறித்த எந்த செய்தியையும் வெளியிடவில்லை.
இருந்தாலும் சில யூடியூப் பக்கங்களிலும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் தாவூத் இப்ராகிம் ஆபத்தான நிலையில், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தாவூத் இப்ராகிம் உடல் நிலை குறித்த இந்த செய்தியை உறுதி செய்ய முடியவில்லை. இந்திய அதிகாரிகள் தரப்பிலோ.. பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பிலோ தாவூத் இப்ராகிம் குறித்த செய்தியை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை. எனவே இவை வதந்தியாக இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications