துபாயில் பல கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்க ரூ.50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்த தாதா தாவூத் இப்ராஹிம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் துபாயில் பல கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்க ரூ.50 லட்சத்து 82 ஆயிரம் முன்பணம் அளித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவாவில் ஷியாம் கிஹோர் என்ற பிளாக் ஸ்கார்பியன் கைது செய்யப்பட்டார். அவர் தாவூத் கும்பலைச் சேர்ந்தவர். அவரின் கைது தாவூதுக்கு பெரும் அடியாக உள்ளது. அபுசலீமுக்கு தண்டனை கிடைத்துள்ளது சட்டம் அனைத்து குற்றவாளிகளையும் பிடிக்கும் என்ற செய்தியை நிழல் உலகத்திற்கு தெரிவித்துள்ளது.

Dawood Ibrahim invests 3 lakh Dhirams in Dubai

தாவூத் தற்போது என்ன செய்கிறார்?

தாவூத் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார். அவர் கராச்சியில் ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அவர் துபாயிலும் ரியல் எஸ்டேட்டில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. தாவூத் கராச்சியில் இருந்து துபாயில் உள்ள யாசிர் என்பவருடன் போனில் பேசியபோது விவரங்கள் தெரிய வந்தது.

துபாயில் கட்டிட திட்டம் வர உள்ள ஒரு நிலம் பற்றி தாவூத் விசாரித்துள்ளார். அந்த நிலத்தை வாங்குவது நல்ல முதலீடு, அதற்கு ரூ.50 லட்சத்து 82 ஆயிரம் முன்பணம் தேவை என்று யாசிர் தெரிவித்துள்ளார். அலி யாகூப் என்பவர் மூலம் பணத்தை அனுப்புமாறு யாசிர் தாவூதிடம் தெரிவித்துள்ளார். கராச்சியில் இருந்த அலி மூலம் பணம் துபாய் சென்றுள்ளது.

இந்த போன் உரையாடலை அடுத்து அலி கராச்சியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு துபாய் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை அந்த நிலத்தை வாங்க முன்பணம் அளிக்கப்பட்டுள்ளது.

தாவூதின் குரல் தான்

போனில் பேசியது தாவூத் இப்ராஹிமே தான் என்று உளவுத் துறை அதிகாரிகள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர். அவர் கராச்சிக்கு வெளியில் இருந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவர் கராச்சியை விட்டு வெளியேறவே இல்லை. அவர் அண்மையில் ஐஎஸ்ஐ உதவியுடன் வங்கதேசம் சென்றுள்ளனர். வங்கதேசத்தில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் அவர் யாரையோ சந்தித்து பேசியுள்ளார் என்று அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

ரியல் எஸ்டேட் ஏன்?

தாவூத் எப்பொழுதுமே ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்து வருகிறார். அதற்காக அவரின் போதைப் பொருள் மற்றும் ஆயுத வியாபாரம் முடங்கிப் போய்விடவில்லை. போதைப் பொருள், ஆயுத வியாபாரங்கள் ஐஎஸ்ஐ உதவியுடன் நடக்கிறது. ஆனால் அவற்றில் நேரடியாக தலையிட வேண்டாம் என தாவூதுக்கு ஐஎஸ்ஐ அறிவுரை வழங்கியுள்ளது.

முன்பெல்லாம் தாவூத் தான் தனது ஆட்களுக்கு போன் செய்வார். ஆனால் அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தாவூத் செய்யும் போன் அழைப்புகள் இந்தியா தவிர அமெரிக்காவாலும் கண்காணிக்கப்படுகிறது என்பது ஐஎஸ்ஐக்கு தெரியும்.

ரியல் எஸ்டேட் தொடர்பான போன் உரையாடல்களால் பெரிய பிரச்சனை எதுவும் ஏற்படாது. அதே சமயம் போதைப் பொருள் அல்லது ஆயுத வியாபாரம் குறித்த போன் உரையாடல் சர்வதேச ஏஜென்சீக்களின் கவனத்தை ஈர்க்கும் என்று நினைக்கிறது ஐஎஸ்ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+