ஆ.. தைவான் நபரின் பல்லில் முளை விட்ட கொய்யா!
தைபே: தைவானில் நோயாளி ஒருவரின் வாயில் பல் ஒன்றில் கொய்யாச் செடி முளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவானில் 36 வயது மனிதர் ஒருவர் கடந்த சில நாட்களாக பல் வலியில் அவதிப் பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக பல் மருத்துவரிடம் சென்றுள்ளார்.
அங்கு அவரது பற்களைச் சோதித்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவரது விஸ்டம் டூத் எனப் படும் ஞானப்பல்லில் கொய்யா விதையொன்று முளை விட்டிருந்தது.
நோயாளி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கொய்யாப்பழம் சாப்பிட்டுள்ளார். அப்போது அவரது கடைவாய்ப் பல்லில் விதை ஒன்று சிக்கியுள்ளது. அதனை அவர் சரிவர பல் துலக்கி வெளியேற்றவில்லை. இதனால், பல் இடுக்கில் இருந்த இடைவெளியில் அந்த கொய்யா விதை முளை விட்டுள்ளது. இதனால் தான் அவருக்கு கடுமையான பல்வலி ஏற்பட்டுள்ளது.
பின்னர், மருத்துவர் கொய்யா விதை முளை விட்டிருந்த பல்லை வாயிலிருந்து உரிய முறையில் பிடுங்கி எடுத்தார்.
பிடுங்கப் பட்ட பல்லில் இருந்த கொய்யா விதை 10 நாள் வளர்ச்சி உடையதாக இருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.