ஆஹா மொத்தமா மாறுதே! சீன கப்பலை ஆய்வுக்காக அனுமதிக்கவில்லை- ட்விஸ்ட் வைத்த மாலத்தீவு! என்ன நடக்கிறது?
மாலத்தீவு: இந்தியா-மாலத்தீவு இடையே தொடர்ச்சியான மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், திடீரென சீன கப்பல் விவகாரத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது.
மாலத்தீவு அதிபராக என்று முய்சு பதவியேற்றுக் கொண்டாரோ அப்போது முதலே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்சு, தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால், இப்போது திடீரென மாலத்தீவின் டோன் மாறி இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மோதல்: இந்தியா மாலத்தீவு இடையே மோதல் இருப்பது ஒரு பக்கம் என்றால் மாலத்தீவு தொடர்ந்து சீன ஆதரவு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாகச் சீனாவின் உளவு கப்பல்கள் எனச் சந்தேகிக்கப்படும் கப்பல்களுக்கு மாலத்தீவு கரைக்கு வர அனுமதி தரப்பட்டது. அதிலும் இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாகச் சீன உளவு கப்பலுக்கு மாலத்தீவு அனுமதி அளித்திருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மாலத்தீவு டோன் மாறியுள்ளது. சமீபத்தில் தான் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் தயவு செய்து மாலத்தீவுக்கு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதற்கிடையே இப்போது சீன கப்பல் விவகாரத்திலும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
அதாவது இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடலின் அமைதியும் பாதுகாப்பும் முக்கியம் தான் என்ற மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர், சீனக் கப்பலை மாலத்தீவு கடல் பகுதியில் ஆராய்ச்சிக்காக தங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், "இந்தியப் பெருங்கடலின் அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது இந்தியா மட்டுமின்றி எங்களுக்கும் முக்கியம் தான். எனவே, நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல நாங்கள் மற்ற நாடுகளுடன் இணைந்தே செயல்படுவோம்" என்றார்.
விளக்கம்: சீனக் கப்பல் விவகாரத்தை விவரித்த அவர், "எங்கள் அரசு தனிப்பட்ட மற்றும் நட்பு முறையில் சீன கப்பல்களுக்கு அனுமதி அளித்தோம். அதுவும் அவர்கள் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்தே அனுமதி தந்தோம். இது மாலத்தீவில் பொதுவான செயல்முறை தான். அதாவது ஒரு அமைதியான நாடாக இருக்கும் நாங்கள், அமைதியான நோக்கத்திற்காக வரும் கப்பல்களை வரவேற்கிறோம்.
"தயவு செய்து வாங்க.." இந்தியர்களிடம் மாலத்தீவு அமைச்சர் வைத்த கோரிக்கை.. பொருளாதாரமே ஆடி போச்சு
ஆனால் அவை மாலத்தீவு கடல் பகுதியில் ஆராய்ச்சிக்காக வரவில்லை.. சீனக் கப்பலை மாலத்தீவு கடலில் ஆராய்ச்சி செய்ய நாங்கள் அனுமதிக்கவில்லை. அந்தத் தகவலில் உண்மை இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
சீன கப்பல்: கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி சீனக் கடல் ஆராய்ச்சிக் கப்பல் சியாங் யாங் ஹாங் 3 மாலத்தீவு கடற்பரப்புக்குச் சென்றது. கடந்த இரண்டு மாதங்களில் சீன கப்பல் மாலத்தீவு பகுதிக்கு வருவது இது இரண்டாவது முறை... மாலத்தீவு கடற்பரப்பில் பயணம் செய்தாலும் சீனக் கப்பல் எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் கடந்த மாதம் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உறுதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
விளக்கம்: அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "மாலத்தீவு கடல் பரப்பில் எந்த ஆராய்ச்சியும் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. சீன கப்பல் தங்களுக்குத் தேவையான உணவுகளைப் பெற்றார்கள்.. பணியாளர்களை மாற்றினார்கள். விமானத்தில் வந்தவர்கள் படகில் ஏறினர், படகில் இருந்தவர்கள் விமானம் வழியாகப் புறப்பட்டனர். இதற்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது" என்று விளக்கமளித்துக் குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications