20 லட்சம் பயணிகள் குவியப் போகிறார்கள்.. பரபரப்பாகும் துபாய் விமான நிலையம்
துபாய்: ஜூன் கடைசி மற்றும் ஜூலை முதல் வாரத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை கிட்டத்தட்ட 20 லட்சம் பயணிகள் வரை பயன்படுத்தக் கூடும் என்று எதிர்பார்ப்பதால் பயணிகள் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வந்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜூன் 30ம் தேதி வார இறுதி தொடங்குகிறது. துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோடை விடுமுறையும் தொடங்குகிறது. மேலும் ரம்ஜானும் வரவுள்ளது. ஜூலை 7ம் தேதி மிகப் பெரிய அளவில் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த சமயத்தில் மிகவும் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு பயணிகள் வந்து விடுவது நல்லது என்று விமான ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கோடை விடுமுறை...
கோடை விடுமுறை, ரம்ஜான் காரணமாக மிகப் பெரிய அளவில் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால் ஏற்பாடுகள் அதற்கேற்ப முடுக்கு விடப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டவர் இந்த சமயத்தில் பெருமளவில் தங்களது சொந்த நாடுகளுக்குப் போவார்கள் என்பதால் கூட்டம் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

கூடுதல் தொழிலாளர்கள்...
பீக் சமயம் இதுதான் என்பதால் கூடுதல் தொழிலாளர்களை வைத்து விமான நிலையம் செயல்படும். குறிப்பாக ஜூன் 30 முதல் ஜூலை 3 வரையிலும், ஜூலை 7 முதல் 10ம் தேதி வரையிலும் கூட்டம் மிகப் பெரிய அளவில் இருப்பது வழக்கமாகும்.

சவால்...
இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் பயணிகள் விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதைக் கட்டுப்படுத்துவதும் சவாலுக்குரியதாக இருக்கும்.

துபாய் விமான நிலையம்...
உலகின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்று துபாய் சர்வதேச விமான நிலையம். உலகின் மிகப் பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் துபாயை தலைமையிடமாகக் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications