கடலில் மூழ்கி தத்தளித்த பள்ளி முதல்வரை காப்பாற்றிய துபாய் போலீசார்
துபாய்: கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய பள்ளி முதல்வரை துபாய் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
50 வயதான பள்ளி முதல்வர் ஒருவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் துபாயில் உள்ள ஜுமைரா கடற்கரைக்கு சென்றார். அங்கு அவரும், அவரது நண்பர்கள் சிலரும் கடலில் குளித்தனர்.
அப்போது பள்ளி முதல்வர் நீச்சல் அடித்துக்கொண்டே கடலின் ஆழப் பகுதிக்கு சென்றுவிட்டார். சோர்வு ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து நீச்சல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் தன்னை காப்பாற்று குரல் கொடுத்தார்.

அவரை அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரால் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவர்கள் அங்கு பணியில் இருந்து போலீசாரிடம் உதவி கேட்டனர். போலீசார் உடனே வந்து பள்ளி முதல்வரை பத்திரமாக மீட்டனர்.
கடல் நீரை குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை கரையில் படுக்க வைத்து போலீசார் முதல் உதவி அளித்தனர். அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications