ஈரானின் புஷேர் அணுமின் நிலையம் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்
புஷேர்: ஈரானின் புஷேர் அணுமின் நிலையம் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.9 அலகுகளாக பதிவாகி இருந்தது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்கா கடற்படை தளம் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகளை வீசியது.

இதில் 80 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே ஈரானில் 176 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளானது.
தீ பிடித்த எஞ்சின்.. வேகமாக கீழே விழுந்த ஈரான் விமானம்.. வெடித்து சிதறிய அந்த நொடி.. ஷாக்கிங் வீடியோ
Recommended Video
இதில் 176 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானின் ஒரே அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷேரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது..
இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.9 அலகுகளாக பதிவானது. வளைகுடா கடற்ரை அருகே புஷேர் அணுமின் நிலையத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் சேத விவரங்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications