துபாயில் தமிழக கல்வியாளருக்கு சிறப்பான வரவேற்பு
துபாய்: துபாய்க்கு வருகை தந்த தமிழக கல்வியாளர் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமது அலிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமது அலி. இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.

தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் எஸ்-ஐஏஎஸ் அகாடமியின் செயல் இயக்குநராகவும் இருந்து வரும் அவர் தமிழக மாணவர்கள் அதிக அளவில் ஐஏஸ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார்.
அமீரகத்தில் ஒரு வார காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் அபுதாபி அய்மான் சங்கம், அபுதாபி காயல் நலச்சங்கம், துபாய் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அவருடன் தொடர்பு கொள்ள : 055 302 67 82 / 050 51 96 433 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications