மன்னார் வளைகுடாவில் அதானி குழுமத்தின் பிரம்மாண்ட காற்றாலை திட்டம்- ஈழத் தமிழரை தூண்டிவிடும் சீனா?
மன்னார்: மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையேயான கடற்பரப்பில் இந்தியாவின் அதானி குழுமம் மிக பிரம்மாண்டமான காற்றாலை மின் திட்டத்தை இலங்கை அனுமதியுடன் அமைப்பதற்கு எதிராக ஈழத் தமிழ் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான இந்தப் போராட்டங்களை சீனா தூண்டிவிடுவதாகவும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
இலங்கையின் தென்பகுதியான சிங்களர் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறது. இலங்கைக்கு குறுகிய கால கடன் வழங்கி அதனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இலங்கையின் பகுதிகளை நீண்டகால குத்தகைக்குப் பெற்று வருகிறது சீனா.

இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான வட இலங்கையிலும் சீனா கால் பதிக்க முயன்றது. இதற்கு இலங்கை அரசும் ஒத்துழைப்பு வழங்கியது. தமிழ்நாட்டை ஒட்டிய மன்னார் வளைகுடாவில் சீனா, பிரம்மாண்ட காற்றாலை திட்டங்களை அமைக்க முதலில் ஒப்புதல் கொடுத்தது இலங்கை. ஆனால் இந்திய அரசு இதனை மிக கடுமையாக எதிர்த்தது. இதனால் வேறுவழியே இல்லாமல் சீனாவுக்கான அனுமதியை இலங்கை திரும்பப் பெற்றது.
இதில் கடுப்பாகிப் போன சீனா, தமிழக மீனவர்கள்- ஈழத் தமிழ் மீனவர்கள் இடையேயான பிரச்சனையில் தலையிட்டது. ஈழத் தமிழ் மீனவர்களை தங்களது பக்கம் திருப்ப பகீர பிரயத்தனம் செய்து வருகிறது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தூண்டுதல்தான் இதற்கு காரணமாகும்.
இந்நிலையில் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு மன்னார் வளைகுடா காற்றாலை திட்டத்தை இலங்கை அரசு வழங்கிவிட்டது. ஆனால் இத்திட்டத்துக்கு எதிராக தற்போது ஈழத் தமிழ் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கூறியதாவது:
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை மின் கோபுரங்களாலும் அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து இடம்பெறும் கனிய வள மணல் அகழ்வு ஆய்வுக்காக இடம் பெறுவதாக சொல்லப்பட்டாலும் இன்று வரை 4000 துளைகளுக்கு மேல் போடப்பட்டுள்ளது. எனவே இவ் இரண்டு செயற்திட்டங்கள் தொடர்பாக கடற்றொழிலாளர் சமூகம் சார்ந்து தொடர்ச்சியாக போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிக்காட்டிய போதும் இந்த செயற்பாட்டை எங்களால் தடுத்து நிறுத்த முடியாத நிலையே இதுவரை காணப்படுகின்றது.
அதன் அடிப்படையில் கடந்த வாரம் பிரஜைகள் குழுவினால் காற்றாலைக்கு எதிராக முன்னெடுத்து வருகின்ற போராட்டத்தை முழுமைக்கும் விதமாக காற்றாலை மின் செயற்திட்டத்தை நிறுத்தி செயற்திட்டத்தை தீவுக்கு அப்பால் கொண்டு செல்லும் படி வலியுறுத்தும் முகமாக எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை மாபெரும் கண்டன பேரணி ஒன்றை நடத்துவதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவில் அமைப்புகளும் ஒன்றுகூடி தீர்மானித்துள்ளோம்.
இந்த அடிப்படையில் கடற்றொழிலாளர் சமூகம் அன்றைய நாள் தங்கள் தொழில்களை நிறுத்தி இந்த பேரணிக்கு ஆதரவு தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்களையும் அழைத்து கருத்தறியும் நிகழ்வு இடம்பெற்றது. இதற்கமைய அனைத்து சங்கங்களும் இணைந்து குறித்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் வருகின்ற 29 திகதி முழுமையாக கடற்றொழில் நிறுத்தப்பட்டு அனைத்து கடற்றொழிலாளர்களின் பங்களிப்போடு இந்த அமைதியான கண்டன பேரணி மன்னார் பேருந்து நிலையத்தில் நடைபெறும். இந்த போராட்டத்திற்கு கடல் சார்ந்த சமூகமும் ஏனைய பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் செலுத்தி இந்த காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு செயற்திட்டம் ஆகிய இரண்டையும் மன்னார் தீவில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு அனைத்து இன மக்களும் வழு சேர்க்க வேண்டும். இவ்வாறு ஆலம் தெரிவித்தார்.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications