For Daily Alerts
Just In
எமிரேட்ஸிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவை அதிகரிப்பு – எதிஹாட் அறிவிப்பு
துபாய்: ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமான சேவை அளிக்கும் நிறுவனமான "எதிஹாட்" அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
துபாய் போன்ற பெருநகரங்களுக்கு தொடர் பயணங்களை மேற்கொள்ளும் தொழிலதிபர்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவினை எதிஹாட் அறிவித்துள்ளது.
அதன்படி, கொச்சி, பெங்களூர், சென்னை, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்கான சேவை அதிகரிக்கப்படவுள்ளது.
சென்னை மற்றும் கோழிக்கோட்டிற்கு இன்று முதல் இரண்டு விமானங்களும், அக்டோபர் முதல் தேதி முதல் ஹைதரபாத்துக்கு அதிக விமானங்களும் இயக்கப்பட உள்ளன.
இந்த அதிகரித்த விமான சேவையின் மூலம் வர்த்தகர்கள் எளிதாக தங்களுடைய வர்த்தக ரீதியான தொடர்புகளை ஐக்கிய அரபு நாடுகளுடன் அதிகரித்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Abu Dhabi carrier Etihad Airways has announced increased frequency on several Indian routes to meet growing demand, it announced onTuesday. Double-daily frequencies will be operated to Bangalore, Chennai and Kozhikode from July 1 and Hyderabad from October 1, 2014. Following the service upgrade, travellers can choose daytime or overnight flights, a statement said.
Story first published: Wednesday, July 2, 2014, 10:55 [IST]