Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதுகில் குத்தி விட்டார்.. சும்மா விட மாட்டேன்.. வாக்னர் குழுவுக்கு கண்கள் சிவக்க புதின் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருந்த வாக்னர் குழு தற்போது ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராகவே வாக்னர் படை திரும்பியிருப்பது புதினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனால், இன்று நாட்டு மக்களுக்கு டிவியில் தோன்றி புதின் உரையாற்றியுள்ளார்.

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு முயற்சி செய்தது. உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால் ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என பயப்பட்ட புதின், உடனடியாக அந்த நாட்டின் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்தன.

 Everyone who took part in mutiny will be punished- Russias Putin stern warning to Wagner Group

உக்ரைனின் பல பகுதிகளை கைபற்றினாலும் கூட ரஷ்யாவால் நினைத்தது போல போரில் வெற்றி பெற முடியவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவியை வழங்கியது. இதனால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு கடும் சவால் கொடுத்தது. இதனால், ஓராண்டை கடந்தும் ரஷ்யா - உக்ரைன் போர் நீடித்து வருகிறது. ரஷ்யாவுக்கும் பெரும் பொருளாதார இழப்பை இந்த போர் கொடுத்துள்ளது.

புதின் ஆவேச பேச்சு: உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு பெரும் உறுதுணையாக வாக்னர் குழு இருந்தது. இந்த வாக்னர் குழு தற்போது ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. வாக்னர் குழு தலைவராக இருக்கும் யெவ்ஜெனி ப்ரிகோஸின் மற்றும் வாக்னர் குழு வீரர்கள் மீது ரஷ்ய அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாகவும் இதனால், வெய்ஜோனி பிரிகோஸ் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் ராணுவதலைமையை வீழ்த்த தயாராக இருப்பதாகவும் 25 ஆயிரம் பேரும் இறப்பதற்கு தயாராகவே இருக்கிறோம். ரஷ்யாவின் தெற்கே உள்ள ரோஸ்டவ் பகுதிக்குள் எங்கள் படை நுழைந்து விட்டதாக வாக்னர் குழு ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்னர் குழுவின் இந்த முடிவு ரஷ்யாவுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. இந்த நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் தோன்றி பேசிய ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது:-

வாக்னர் குழுவின் தலைவர் முதுகில் குத்திவிட்டார். டோன்பாஸ் பகுதிக்கு விடுதலை பெற்று கொடுத்த வாக்னர் குழுவினர் ஹீரோக்கள். நமக்கு ஒற்றுமைதான் தேவை. நாம் தேசத்துரோகத்தை எதிர்கொண்டு வருகிறோம். வாக்னர் குழுவின் தலைவர் செயல்பாடு துரோகத்திற்கு இணையானது. ரஷ்ய மக்களை பாதுகாப்பில் உறுதியாக இருக்கிறேன். ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் ஒவ்வொருவரும் துரோகிகள்தான்.

யார் இந்த வாக்னர் குழு: கலகத்தில் ஈடுபடும் ஒவ்வொரும் தண்டிக்கப்படுவது நிச்சயம்" என ஆவேசமாக பேசியுள்ளார். ரஷ்யாவில் இயங்கி வரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்புதான் இந்த வாக்னர் ஆயுதக்குழு. ரஷ்யா மட்டும் இன்றி லிபியா, மாலி, சிரியா பல இடங்களிலும் இந்த குழு உள்நாட்டு போருக்கு அரசுக்கு ஆதரவாக ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகிறது.

சட்டத்திற்கு புறம்பாகவே இந்தக் குழு இயங்குகிறது. ரஷ்யாவிலும் கூட தனியார் ராணுவ ஒப்பந்த குழுக்களுக்கு சட்டப்பூர்வ தடை இருக்கிறது. ஆனாலும் புதினின் மறைமுக ஆதரவோடு இந்தக் குழு செயல்பட்டது. இந்த நிலையில் தற்போது ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே வாக்னர் குழு திரும்பியுள்ளது புதினுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+