"எங்கேயும் காதல்".. ஜாதி, மதம், எல்லை கடந்து பாகிஸ்தான் இளைஞரை கரம்பிடித்த அமெரிக்க பெண்
இஸ்லாமாபாத்: ஃபேஸ்புக் பழக்கத்தின் மூலமாக ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், தனது காதலுக்காக ஜாதி, மதம், நாட்டைக் கடந்து தனது காதலனான பாகிஸ்தான் இளைஞரை அமெரிக்க பெண் கரம் பிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மிண்டி ராஸ்முஸ்டன் என்ற அந்த அமெரிக்க பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை சுலேகா என்று மாற்றிக் கொண்டார்.
அமெரிக்கா நாட்டின், இலினாய்ஸ் மாகாணம் ஸ்பிரிங்பீல்ட் என்ற பகுதியை சேர்ந்தவர் மிண்டி ராஸ்முஸன். 47 வயதான மிண்டிக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த சஜித் செப் கான் என்ற 31 வயது இளைஞருக்கும் ஃபேஸ்புக் மூலமாக ஓராண்டுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நீண்டநாட்களாக நண்பர்களாப் பழகி பேசி வந்துள்ளனர். இந்த நட்பானது, நாளடைவில் இருவருக்கிடையேயும் காதலாக மாறியுள்ளது.

பெற்றோர் சம்மதம்
இதையடுத்து, மிண்டி ராஸ்முஸனும், சஜித் செப் கானும் தங்களது காதல் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்து, திருமணத்துக்கும் ஒப்புதல் வாங்கியுள்ளனர். நாடு, மதம் என அனைத்தையும் தாண்டி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து 90 நாட்கள் விசா மூலமாக மிண்டி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.
இஸ்லாம் முறைப்படி திருமணம்
அங்கு இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் மிண்டி ராஸ்முஸனை, சஜித் செப் கான் வரவேற்று தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். சஜித்தின் உறவினர்கள் மிண்டிக்கு பரிசுகளை வழங்கி இருவரையும் வாழ்த்தினர். மிண்டி ராஸ்முஸ் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரையும் சுலேகா என்று மாற்றிக் கொண்ட நிலையில், சுலேகாவுக்கும், சஜித் செப் கானுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பாகிஸ்தான் அழகான நாடு
இதுகுறித்து சுலேகா கூறுகையில், பாகிஸ்தான் மிகவும் அமைதியான, அழகான நாடு. எங்களது திருமணத்துக்கு குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு முழு ஆதரவு தெரிவித்தனர். பாகிஸ்தானின் கலாசாரம், இயற்கை அழகை நேரில் காண அந்நாட்டிற்கு அனைவரும் நேரில் செல்ல வேண்டும். சஜித் செப் கான் மிகவும் அன்பான, பணிவான நபர். அவருடைய அக்கறையும், மரியாதையுமான நடத்தையும் தான் என்னை மிகவும் கவர்ந்தது என்றார்.
தனிப்பட்ட விருப்பம்
சஜித் செப் கான் கூறுகையில், சுலேகா இஸ்லாம் மதத்திற்கு மாறியது அவருடைய தனிப்பட்ட முடிவு. யாரும் அவரை கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications