விமானத்திலிருந்து ஏரிக்குள் கொட்டப்படும் ஆயிரக்கணக்கான மீன்கள்.. வாவ் வீடியோ.. என்ன காரணம்?
அமெரிக்காவில் விமானத்தில் இருந்து ஏரிக்குள் கொட்டப்படும் மீன்களின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
Recommended Video
நியூயார்க்: அமெரிக்காவில் விமானத்தில் இருந்து ஏரிக்குள் கொட்டப்படும் மீன்களின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள, உட்டா என்ற மாநிலத்தில் இந்த பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக இப்படி விமானத்தில் மீன்களை கொண்டு சென்று கடலில் போடும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.
இதுகுறித்து தற்போது இணையத்தில் நிறைய வீடியோக்கள் வெளியாகி உள்ளது. விமானத்தில் இருந்து இப்படி மீன்கள் வீசுவது விசித்திரமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. இதை எக்ஸ்டிரீம் பிஷ் ஸ்டாக்கிங் (extreme fish stocking) - தீவிர மீன் சேமிப்பு என்று அழைக்கிறார்கள்.
உட்டா ஏரிகள்
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள, உட்டா என்ற மாநிலத்தில் நிறைய ஏரிகள் உள்ளது. மலை பகுதி என்பதால் இங்கு ஏரிகள் தனி தனியாக இருக்கும். மற்ற நீர் நிலைகளுடன் தொடர்பற்று தனியாக இருக்கும். இதை காண நிறைய சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல், நிறைய பேர் இங்கு மீன் பிடிக்க வருவார்கள்.
|
மீன்களை நிரப்புவார்கள்
இதனால் குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு எப்போதும் இங்கு மீன்கள் தீர்ந்துவிடும். மீண்டும் மீன்கள் உருவாகும் வரை சுற்றுலா பயணிகளை காத்திருக்க வைக்க வேண்டும் என்று இப்படி ஒரு வழக்கத்தை உருவாக்கி உள்ளனர். அதன்படி விமானம் மூலம் மீன்களை தூக்கி கொட்டுகிறார்கள். ஒரு காலத்தில் பெரிய பெரிய கன்டெய்னர்களில் மீன்களை கொண்டுவந்து தண்ணீரில் விட்டுள்ளனர்.
|
எப்படி செய்வார்
இதற்காக விமானத்தில் மிக சிறிய அளவில் இருக்கும் மீன்களை எடுத்து செல்கிறார்கள். அதன்பின் ஏரிகளுக்கு அருகே சென்று, எவ்வளவு தாழ்வாக செல்ல முடியுமோ அவ்வளவு தாழ்வாக சென்று, மீன்கள் இருக்கும் பெட்டியை திறந்து விடுகிறார்கள். இதன் மூலம் எல்லா ஏரிகளுக்கும் மீன்கள் மீண்டும் நிரப்பப்படும்.
|
மீனுக்கு எதுவும் ஆகாதா
இதனால் மீன்களுக்கு எந்த காயமும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது. மீன்களின் உடல் வாகு அப்படித்தான், அதே போல் எடை மிகவும் குறைவும் என்பதால் 99 சதவிகித மீன்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.