கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்... உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பேரதிர்ச்சி..!
பியூனோ ஏர்ஸ்: கால்பந்தாட்ட ஜாம்பவான் டீகோ மாரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள டீகோ மாரடோனா அண்மையில் தான் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இதற்காக 8 நாட்கள் அர்ஜெண்டினா தலைநகர் பியூனோ ஏர்ஸில் உள்ள பிரபல மருத்துவமனையில் உள்நோயாளியாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக கடந்த 11-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மாரடோனாவுக்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்குள் அவர் உயிர்பிரிந்துவிட்டது. இந்த தகவலை மாரடோனாவின் வழக்கறிஞர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே மூளையில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைக்கு பிறகு மாரடோனாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக அவரது உடல்நிலையை கண்காணிக்க அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை தரப்பில் இருந்து பிரத்யேக செவிலியர் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து உலகில் தனிக்கென தனி சாம்ராஜ்யம் கட்டி ஆண்ட மாரடோனாவின் திடீர் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் மாரடோனா குறித்த நினைவுகளை, அவரது பெருமைகளை, திறமைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications