மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஜாமீன்.. கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்திய அரசு
கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு அரசாங்கம் சுமத்தியுள்ளது.
நஜீப் ரசாக் நேற்று மலேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
'மலேசியா மேம்பாட்டு பெர்ஹார்டு' அமைப்பில் ரஜீப் ரசாக் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற ரூ.4,700 கோடி ஊழல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் அட்டார்னி ஜெனரல் டோமி தாமஸ், நஜீப் ரசாக் மீதான குற்றங்களை வாசித்தார். அதில் மூன்று குற்றங்கள் நம்பிக்கை மோசடி தொடர்பான கிரிமினல் குற்றங்களாகும், மற்றொரு குற்றம் அரச பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் இருந்தது.
இதில் ஒவ்வொரு குற்றச்சாட்டும் அதிகபட்சமாக 20 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட சட்டத்தில் இடம் உள்ளது. அரசு பதவியை தவறாக பயன்படுத்திய வழக்கில் அவரிடம் அபராதமும் விதிக்க முடியும்.
ஊழல் தொகையை விட ஐந்து மடங்கு அதிகமாக இந்த அபராதத் தொகை இருக்கும். இன்றைய விசாரணையின் போது நஜிப்பின் பிள்ளைகளும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
நஜீப் ரசாக் நேற்று இரவு போலீஸ் லாக்அப்பில் அடைக்கப்பட்டிருந்தார். மலேசிய நேரப்படி இன்று காலை 8.20 மணிக்கு அவர் கோலாலம்பூரில் உள்ள ஹைகோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அடர் நீல வண்ணத்தில் சூட்டும் சிவப்பு வண்ணத்தில் டையும் அணிந்திருந்தார். தான் தவறு செய்யவில்லை என்றும் ஜாமீன் வழங்கும்படியும் அவர் கோரிக்கைவிடுத்தார்.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 250,000 டாலர் மதிப்பில் பிணைத் தொகை செலுத்த உத்தரவிட்டு, ஜாமீன் வழங்கினார். இதனிடையே, கோர்ட்டில் அதிகப்படியான மீடியா உறுப்பினர்களும் பொதுமக்களும் குவிந்திருந்தனர். சில மாதங்கள் முன்பு முடிவடைந்த மலேசிய நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நஜீப் வெளிநாடு செல்வதற்கு புதிய அரசு தடை விதித்தது.
தற்போது 92 வயதாகும், மகாதீர் முகமது தலைமையிலான கூட்டணி அரசு மலேசியாவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications