மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஜாமீன்.. கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்திய அரசு
கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு அரசாங்கம் சுமத்தியுள்ளது.
நஜீப் ரசாக் நேற்று மலேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
'மலேசியா மேம்பாட்டு பெர்ஹார்டு' அமைப்பில் ரஜீப் ரசாக் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற ரூ.4,700 கோடி ஊழல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் அட்டார்னி ஜெனரல் டோமி தாமஸ், நஜீப் ரசாக் மீதான குற்றங்களை வாசித்தார். அதில் மூன்று குற்றங்கள் நம்பிக்கை மோசடி தொடர்பான கிரிமினல் குற்றங்களாகும், மற்றொரு குற்றம் அரச பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் இருந்தது.
இதில் ஒவ்வொரு குற்றச்சாட்டும் அதிகபட்சமாக 20 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட சட்டத்தில் இடம் உள்ளது. அரசு பதவியை தவறாக பயன்படுத்திய வழக்கில் அவரிடம் அபராதமும் விதிக்க முடியும்.
ஊழல் தொகையை விட ஐந்து மடங்கு அதிகமாக இந்த அபராதத் தொகை இருக்கும். இன்றைய விசாரணையின் போது நஜிப்பின் பிள்ளைகளும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
நஜீப் ரசாக் நேற்று இரவு போலீஸ் லாக்அப்பில் அடைக்கப்பட்டிருந்தார். மலேசிய நேரப்படி இன்று காலை 8.20 மணிக்கு அவர் கோலாலம்பூரில் உள்ள ஹைகோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அடர் நீல வண்ணத்தில் சூட்டும் சிவப்பு வண்ணத்தில் டையும் அணிந்திருந்தார். தான் தவறு செய்யவில்லை என்றும் ஜாமீன் வழங்கும்படியும் அவர் கோரிக்கைவிடுத்தார்.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 250,000 டாலர் மதிப்பில் பிணைத் தொகை செலுத்த உத்தரவிட்டு, ஜாமீன் வழங்கினார். இதனிடையே, கோர்ட்டில் அதிகப்படியான மீடியா உறுப்பினர்களும் பொதுமக்களும் குவிந்திருந்தனர். சில மாதங்கள் முன்பு முடிவடைந்த மலேசிய நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நஜீப் வெளிநாடு செல்வதற்கு புதிய அரசு தடை விதித்தது.
தற்போது 92 வயதாகும், மகாதீர் முகமது தலைமையிலான கூட்டணி அரசு மலேசியாவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications