நியூஸி.முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்! இந்தியாவில் தெருநாயிடம் கடி வாங்கி 12 தடுப்பூசி போட்டவர்
ஆக்லாந்து: இந்தியாவிற்கு 1955ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட வந்த தெருநாயிடம் கடி வாங்கி 12 தடுப்பூசி போட்ட நியூஸிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மாட் பூர் 90 வயதில் வயது மூப்பு காரணமான உடல் நலக்குறைவால் காலமானார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் 1953-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் மாட் பூரே. இந்தியாவிற்கு 1955-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்து அணி இந்தியா வந்தது.
அந்த அணி சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
100 வயது.. உலகின் மிக வயதான இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்.. பிராட்மேனுக்கு நெருக்கம்

பெங்களுரு டெஸ்ட்
பெங்களூருவில் நியூசிலாந்து அணி பந்து வீசி பில்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென மைதானத்திற்குள் ஒரு தெரு நாய் ஓடிவந்துவிட்டது. இந்ந்நிலையில் நாய்களின் மீது அளவற்ற பாசம் கொண்ட ஆல்ரவுண்டரான கிரிக்கெட் வீரர் மாட் பூரே. அந்த நாயை பாசத்துடன் பிடிப்பதற்காக ஓடினார். ஆனால் அந்த நாய் தன்னை தாக்க வருகிறார் என நினைத்து தப்பி ஓடியது. ஆனால் அதிவேகமாக ஓடிய மாட் பூரே நாயை பிடித்துவிட்டார்.

ரேபிஸ் நோய்
அப்போது எதிர்பாராதவிதமாக நாய் கிரிக்கெட் வீரர் மாட் பூரேவை கடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டுது. இதனிடையே அந்த நாய்க்கு ரேபிஸ் நோய் தாக்கியிருப்பது அடுத்த சில நாட்களில் தெரிய வந்தது. இதனால் கிரிக்கெட் வீரர் மாட் பூரேவுக்க 12 தடுப்பூசிகள் அடுத்த நாளில் வயிற்றில் போடப்பட்டது.

100 கிமீ பயணத்து ஊசி
இது தொடர்பாக அவரது மகன் ரிச்சர்ட் கூறுகையில், எனது தந்தைக்கு இந்திய சுற்றுப்பயணத்தின் போது நாய் கடியால் இரண்டு வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு ஆண்டிபயாடிக் ஊசி தேவைப்ட்டது. ஒரு சில நாளில் மருத்துவர்கள் உடன் இல்லாததால் 100 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஊசி போட்டுக்கொண்டார்.

உடல் நலக்குறைவால் மரணம்
என்னுடைய முழு குடும்பமும் நாய்கள் மீது அளவற்ற பாசம் கொண்டது. அப்பா வழக்கமாக நாய்களை தழுவுவார். அப்படித்தான் அந்த நாயை தூக்க முயன்றார். ஆனால் அது கடித்துவிட்டது. இதனால் 12 நாளில் 12 தடுப்பூசி போட்டார்" என்றார். இந்நிலையில் ஆல் ரவுண்டரான மாட்பூரே வயது மூப்பு உடல் நலக்குறைவால் 90வயதில் காலமானார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications