ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற 4 இந்தியர்கள் சிரியாவில் கைது !

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற இந்தியைவைச் சேர்ந்த 4 பேரை சிரிய போலீசார் கைது செய்துள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக வெடித்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Four Indians Planning To Join ISIS arrest In Syria

இதனிடையே சமூக வலைதளங்கள் மூலம் ஐ.எஸ் அமைப்பினர் அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து தங்களது இயக்கத்தில் சேர வற்புறுத்தும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஐ.எஸ்.இயக்கத்தில் சேர முயன்றபோது போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரத திட்டமிட்ட 4 இந்தியர்களை சிரியா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சிரியாவின் துணை பிரதமர் வலித் அல் மவுலம், ஜோர்டானிலிருந்து சிரியாவுக்குள் நுழைந்து ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர திட்டமிட்ட 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிரிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் குறித்த விவரங்களையும் இந்திய அதிகாரிகளிடம் அவர் கேட்டுள்ளார். விரைவில் அவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+