For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃபிரான்ஸ் அதிரடி: பெட்ரோல், டீசல் கார்களுக்கு வருகிறது ஒட்டுமொத்த தடை

By BBC News தமிழ்
|
பெட்ரோல், டீசல் கார் விற்பனைக்கு 2040 ஆம் ஆண்டிற்குள் தடை: ஃபிரான்ஸ் அறிவிப்பு
Reuters
பெட்ரோல், டீசல் கார் விற்பனைக்கு 2040 ஆம் ஆண்டிற்குள் தடை: ஃபிரான்ஸ் அறிவிப்பு

வரும் 2040 ஆம் ஆண்டிற்குள், பெட்ரோல் அல்லது டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் எந்தவொரு கார் விற்பனையையும் ஃபிரான்ஸ் தடைவிதிக்க உள்ளது. இதனை ஒரு புரட்சி என்று சூழலியல்துறை அமைச்சர் அழைத்துள்ளார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மீதான திட்டமிடப்பட்ட தடையை நிகோலஸ் ஹுயுலோ அறிவித்துள்ளார்.

2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு இல்லாத நாடாக ஃபிரான்ஸ் உருவாக திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஃபிரெஞ்சு சந்தையில் ஹைபிரிட் கார்களின் சந்தை 3.5% ஆக உள்ளது. அதில், வெறும் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தும் கார்களின் சந்தை 1.2% ஆக உள்ளது.

தற்போது பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை, 2040-க்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பற்றிய எந்தவித தெளிவான அறிவிப்பும் இல்லை.

ஒரு மூத்த சுற்றுச்சூழல் பிரசாரகரான ஹுயுலோ, புதிய ஃபிரெஞ்சு அதிபர் இமானுவேல் மங்ரோங்கால் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் சுற்றுச்சூழல் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்துள்ள மக்ரோங், பூமியை மீண்டும் சிறப்பாக்க டொனால்ட் டிரம்பை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் அதிபர் டிரம்பின் முடிவு, ஃபிரான்ஸின் இந்த புதிய வாகன திட்டத்திற்கு ஒரு முக்கிய காரணி என்பது மறைமுகமாகக் கூறப்பட்டது.

பிற செய்திகள் :

BBC Tamil
English summary
France is set to ban the sale of any car that uses petrol or diesel fuel by 2040, in what the ecology minister called a "revolution".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X