வாழ்ந்தா ஸ்வீடனில் வாழனும்.. 30 நாள் சம்பளத்துடன் லீவு, ஐபோன், இந்திய ஐடி ஊழியரை மிரள வைத்த சலுகைகள்
ஸ்வீடன்: ஸ்வீடனில் ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது என்றும், பெரும்பாலான அலுவலகங்கள் பொதுவிடுமுறைக்கு முதல் நாள் அரை நாட்கள் விடுமுறை வழங்குவதாகவும், இலவசமாக ஐபோன்கள் வழங்குவதாகவும் 10000 மாதாந்திர உதவி தொகை, மதிய உணவு, மசாஜ், ஜிம் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகிறது என்றும் இந்திய ஐடி ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பட்டியலை பார்த்து பலர் திகைத்து போயிருக்கிறார்கள்.
இந்தியாவிற்கு மேற்கே உள்ள ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வாழ்க்கை தரமும், வசதி வாய்ப்புகளும் மிக அதிகம். அங்கு தொழிற்சங்க விதிகளும் வலுவாக உள்ளன. மிகவும் முன்னேறிய நாடுகளான இங்கு பணியாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இந்தியா உடன் ஒப்பிடும் போது சம்பளம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஐடி நிறுவன பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சலுகை மற்றும் வசதிகள் கேட்போரை மலைத்து போக வைத்துள்ளது. நிறைய பேர் இதுபற்றி பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.

அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த அசுதோஷ் என்பவர் ஸ்வீடனில் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் ஸ்வீடிஷ் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை விரிவாக விளக்கி உள்ளார்.
அந்த வீடியோவில் அசுதோஷ் கூறிய ஒவ்வொரு தகவலும் இந்தியாவில் வேலை செய்வோரை ஆச்சரியப்பட வைத்தள்ளது. அசுதோஷ் இதுபற்றி கூறுகையில். ஸ்வீடனில் முழுநேர ஊழியர்கள் வருடத்திற்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நேரத்தைப் பெற உரிமை உள்ளது. பெரும்பாலான அலுவலகங்கள் பொது விடுமுறைக்கு முன் அரை நாள் விடுமுறை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளன.
புதிதாக வேலையில் சேருவோருக்கு ஆரம்பமே அமர்க்களப்படுத்தும் விதமாக, ஆப்பிள் உள்ளிட்ட பெரிய பிராண்ட் மடிக்கணினி மற்றும் லேட்டஸ்ட் வெர்சனில் ஐபோன் வழங்கப்படுகிறது.. மேலும் மசாஜ் செய்து கொள்ள வசதிகள், ஜிம்மில் உறுப்பினராக சேரும் வசதி, பிற ஆரோக்கிய சேவைகளுக்காக அலவன்ஸ் மட்டும் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை ஸ்வீடிஸ் நிறுவனங்கள் தருகின்றன. இது அங்கு வேலை செய்வோரின் சிறப்பான வாழ்க்கை தரத்திற்கு நிறுவனம் தரும் முக்கியத்துவத்திற்கு உதாரணம் ஆகும். நீண்ட தூரத்தில் இருந்து வந்து வேலை செய்வோருக்காக, சில நிறுவனங்கள் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை இருப்பிட அலவன்ஸ் வழங்குகின்றன.
மேலும் 10,000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகையுடன், மதிய உணவும் வழங்கப்படுகிறது. ஊழியர்களுக்கான சலுகைகள் இத்துடன் முடிவடையவில்லை. குழந்தையை பார்த்துக் கொள்ளும் பெற்றோர்கள் தங்கள் சம்பளத்தில் 80 சதவீதத்துடன் 480 நாட்கள் விடுப்பு பெற தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் ஊழியர்கள் கார்ப்பரேட் சேமிப்புடன் கார்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.
அதேபோல் வேலை இழப்பவர்களுக்கு தொழிற்சங்கம் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை நிதி உதவி வழங்குகின்றன. கோடை காலத்தில் வேலை நேரம் மிக குறைவாக இருக்கும். ஒரு மணி நேரம் வரை பெர்மிசன் எடுத்துக் கொள்ள முடியும். சொல்லாமல் கூட விடுமுறை எடுத்துக் கொள்ள முடியும்" என்று கூறினார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications