பாரீஸில் சவுதி இளவரசர் கார் மீது தாக்குதல்- துப்பாக்கி முனையில் 2.50 லட்சம் ஈரோ கொள்ளை!
பாரிஸ்: பாரிஸில் சவுதி இளவரசரின் காரின் மீது தாக்குதல் நடத்திய துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் 2.50 லட்சம் மதிப்புள்ள ஈரோ பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கொள்ளையர்கள் மேலும் சில முக்கியமான கோப்புகளையும் திருடிச் சென்றுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது.
வடக்கு பாரிஸில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தின் போது, சவுதி இளவரசர், அங்குள்ள சவுதி தூதரகத்தில் இருந்து லீ பர்கெட்டில் உள்ள தூதரகம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது காரினை வழிமறித்து தாக்கிய கொள்ளையர்கள், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை என்றும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர். பாரிஸின் போர்டி டி லா சப்லே அருகே இச்சம்பவம் நேற்று நடைபெற்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச்சம்பவத்திற்கு பயன்பட்ட வாகனம் திருட்டு வாகனம் ஆகும். கொள்ளைக்கு பின் அவ்வாகனமானது கொள்ளையர்களால் எரிக்கப்பட்டும் விட்டது. அக்கொள்ளையர்கள் பற்றிய விவரமானது இதுவரை தெரியவில்லை.
"இது ஒரு முரண்பாடான கொள்ளைச் சம்பவம். அவர்களுக்கு முன்னரே எல்லா தகவல்களும் தெரிந்துள்ளது" என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications