படுத்த படுக்கையாக இருக்கும் பாக்தாதி: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி
பாக்தாத்: அபூபக்கர் அல் பாக்தாதி படுகாயம் அடைந்துள்ளதால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தலைவர் பதவிக்காக மோதல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார். அவரது முதுகெலும்பில் அடிபட்டுள்ளதுடன், அவரது இடது கால் பயன்படாமல் போயுள்ளது.
இதையடுத்து பாக்தாதியை பாதுகாப்பு காரணங்களுக்காக ஈராக்கின் மொசுல் நகரில் இருந்து சிரியாவின் ராக்கா நகருக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இடைக்கால தலைவர்
பாக்தாதியால் உத்தரவுகள் பிறப்பிக்க முடியும் என்ற போதிலும் அவரால் ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியவில்லை. இதனால் இடைக்கால தலைவரை நியமிக்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஷுரா கவுன்சில் முடிவு செய்துள்ளது.

பாக்தாதி
ஷுரா கவுன்சில் தேர்வு செய்யும் இடைக்கால தலைவர் பாக்தாதிக்கு கீழ் பணிபுரிவார். அவர் பாக்தாதியின் கட்டளைப்படி ஈராக் மற்றும் சிரியாவில் நடக்கும் அமைப்பின் செயல்பாடுகளை கண்காணிப்பார்.

தேர்தல்
இடைக்கால தலைவரை தேர்வு செய்யும் தேர்தலில் ஈராக்கைச் சேர்ந்த இருவரும், சிரியாவைச் சேர்ந்த ஒருவரும் போட்டியிடுகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 9 மூத்த தலைவர்களை கொண்ட ஷுரா கவுன்சில் இந்த வாரம் இடைக்கால தலைவரை தேர்வு செய்ய உள்ளது.

தலைவர்
ஈராக்கைச் சேர்ந்த முன்னாள் இயற்பியல் ஆசிரியரான அபு அலா அல் அஃப்ரி மற்றும் அபு அலி அல் அன்பாரி, சிரியாவைச் சேர்ந்த ராக்கா நகரின் ஐஎஸ்ஐஎஸ் ஆளுநரான அபு லுக்மான் என்ற அலி மூஸா அல் ஹவிக் ஆகியோர் இடைக்கால தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதில் அஃப்ரியும், அன்பாரியும் ஈராக்கில் உள்ள அல் கொய்தா அமைப்பில் இருந்து வந்தவர்கள்.

அஃப்ரி
தலைவர் தேர்தலில் அன்பாரி மற்றும் லுக்மானை விட அல் அஃப்ரி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஷுரா கவுன்சிலின் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்தாதி மரணம்
மார்ச் மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த பாக்தாதி இறந்துவிட்டார் என்று ஈரான் ரேடியோ அண்மையில் தெரிவித்தது. பாக்தாதி நியமித்த முன்னாள் இயற்பியல் ஆசிரியரான அபு அலா அல் அஃப்ரி அடுத்த தலைவர் ஆகிறார் என செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications