கதறும் ஹாங்காங்..குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! 36 பேர் உயிரிழப்பு..279 மாயமானதால் பெரும் பதற்றம்
ஹாங்காங்: ஹாங்காங் தாய் போ குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 36 பேர் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் தீ விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
ஹாங்காங் அருகே தாய் போ பகுதியிலுள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு நிமிடத்தில் பல குடும்பங்களின் வாழ்க்கையே சிதறடித்த இந்த விபத்து, சமீப ஆண்டுகளில் ஹாங்காங் கண்ட மிகப் பெரிய பேரழிவாக மாறியுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, தீ விபத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும், தீயணைப்பு வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 279 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் 29 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சம்பவத்துக்குப் பிறகு சாடின் பகுதியில் உள்ள பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் ஜான் லீ இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார். தீ விபத்தில் காயம் அடைந்த பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அந்த குடியிருப்பு வளாகத்தின் எட்டு குடியிருப்புகளில், ஏழு குடியிருப்புகளில் கடந்த சில மாதங்களாக பழுது பார்க்கும் பணி நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுமானப் பணிகளுக்காக கட்டிடங்கள் முழுவதும் மூங்கில் கட்டைகள் மற்றும் பச்சை வலைகள் போர்த்தப்பட்டிருந்தது. இந்த மூங்கிலில் பயன்படுத்தப்பட்ட ஸ்டைரோபோம் என்ற பொருளால் தீ வேகமாக பரவி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் தான், தீ வழக்கத்திற்கு மாறாக மிக வேகமாக பரவியதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். புதன்கிழமை பிற்பகல் 2.51 மணியளவில் தீ விபத்து நடந்த புகார் பெறப்பட்டுள்ளது. சில நிமிடங்களிலேயே கரும்புகை எழுந்தது.
ஆரம்பத்தில் 'நம்பர் 1' அலாரம் என வகைப்படுத்தப்பட்ட தீக்கான எச்சரிக்கை, 3.34 மணிக்கு 'நம்பர் 4'ஆகவும், 6.22 மணிக்கு அதிகபட்சமான 'நம்பர் 5' நிலைக்கு சென்றது. ஹாங்காஙில் தீ விபத்துகள் 1 முதல் 5 வரை வகைப்படுத்தப்படும் நிலையில், 5 என்றால் மிகப் பெரிய தீவிபத்து என்று பொருளாகும். தீ பரவிய மூன்று கட்டிடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நான்கு கட்டிடங்கள் எரிந்துகொண்டே இருந்தன. இதனால் தீயணைப்பு படையினருக்கு பெரும் சவால் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக சுமார் 900 பேர் அருகிலுள்ள சமுதாயக் கூடங்களிலும், தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications