லிபியாவில் தொடரும் மோதல்கள் : சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்
லிபியாவின் தலைநகரான திரிபோலியில் போராளி குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்களால் இந்நகரின் அருகே உள்ள ஒரு சிறைக்கூடத்தில் இருந்து கிட்டத்தட்ட 400 கைதிகள் தப்பியோடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அய்ன் ஜாரா என்ற அந்த சிறையின் கதவுகளை உடைத்து அவர்கள் வெளியேறியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
தப்பியோடுபவர்களை தடுத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய சிறைக்காவலர்களால், சிறையில் ஏற்பட்ட கலவரத்தையும் அதன்பின் நடந்த நிகழ்வையும் தடுக்க இயலவில்லை.
தலைநகர் திரிபோலியில் நடந்த மோதல்களால் ஐ.நாவின் ஆதரவை பெற்ற லிபியா அரசு அவசர நிலையை அறிவிக்க வேண்டியதாயிற்று.
ஞாயிற்றுக்கிழமை ஆயுதம் தாங்கிய இரு ஆயுதக்குழுக்கள் இந்த சிறை வளாகம் அருகே கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த சிறையில் ஆண் கைதிகள் மட்டுமே உள்ளனர்.
தென் கிழக்கு திரிபோலியில் உள்ள அய்ன் ஜாரா சிறையில் உள்ள கைதிகள் பெரும்பாலும் காலஞ்சென்ற லிபிய தலைவரான கடாஃபியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், கடந்த 2011-ஆம் ஆண்டில் அந்த நாட்டில் கடாஃபியின் ஆட்சிக்கு எதிராக நடந்த மக்கள் எழுச்சி மற்றும் போராட்டங்களின் போது நடந்த கொலைகளை இவர்கள் செய்ததாக குற்றம் கண்டறியப்பட்டது.
இதனிடையே, லிபியாவின் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமையன்று பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் வாழ்ந்துவரும் ஒரு முகாமின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதகவும், பலர் காயமடைந்ததாகவும் அவசரசேவை பிரிவினர் மற்றும் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு மேல் இந்நாட்டின் தலைநகரான திரிபோலியில் நடந்து வரும் போராளி குழுக்களை இடையேயான மோதல்களில் உள்ளூர்வாசிகள் உள்பட 47 பேர் இறந்துள்ளதாக லிபியாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- சாதாரண குடும்பத்தில் பிறந்து முகலாய பேரரசையே ஆண்ட நூர் ஜஹான்
- நான்கு வழிச் சாலையால் பொருளாதாரம் சிதையும்
- சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
- இந்தியாவில் கணக்கில் வராத பெண்களின் மரணங்கள்
- கோலாகலமாக நிறைவு பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகள்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக















Click it and Unblock the Notifications