இத்தாலியில் கப்பல் மூழ்கி 100 பேர் பலி- 250 பேர் கதி என்ன?

Subscribe to Oneindia Tamil

லம்பெடுசா: வட ஆப்பிரிக்காவில் இருந்து 463 பேருடன் இத்தாலி நோக்கி சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கியதில் 100க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வட ஆப்பிரிக்காவில் இருந்து 463 பேருடன் கப்பல் இன்று புறப்பட்டது. இவர்கள் அனைவரும் இத்தாலிக்கு அகதிகளாக குடியேறச் சென்றவர்கள்.

Hundreds feared dead after migrant ship sinks off Italy

இந்தக் கப்பல் துனிசியாவின் கடற்பரப்பைக் கடந்து தெற்கு இத்தாலியில் உள்ள தீவான லம்பெடுசா நோக்கி சென்று கொண்டிருந்த போது கடலில் மூழ்கியது.

இதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை இத்தாலி கடற்படை மேற்கொண்டது. 150 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். 85 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

இதனால் பலி எண்ணிக்கை 100ஐத் தாண்டக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 250 பேரின் கதி என்னவென்றும் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+