எரிச் சாராயம் குடித்தால் கொரோனா வராது.. ஈரானில் பரவிய வதந்தி.. 300 பேர் பலி.. 1000 பேர் கவலைக்கிடம்
டெஹ்ரான்: ஈரானில் எரிசாராயத்தை குடித்தால் கொரோனா குணமடையும் என வதந்தி பரவிய நிலையில் அதை குடித்த 300 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 1000 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸால் ஈரானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஈரானில் 29 ஆயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,200 பேர் பலியாகிவிட்டனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானில் பலி எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் வருவதை தடுப்பதற்காக ஈரானில் உள்ள பல ஏழை, படிக்காத மக்கள் இணையதள வதந்திகளை நம்புகிறார்கள். அதன்படி எரிச்சாராயம் குடித்தால் கொரோனா வராது என வதந்தி காட்டுத் தீ போல் பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மெத்தனால் கலந்து சாராயத்தை குடித்தனர்.

1000 பேர் ஆபத்து
5 வயதுள்ள குழந்தைக்கு கூட அவரது பெற்றோர் சாராயம் கொடுத்ததால் அந்த குழந்தை பார்வையை இழந்துள்ளது. ஈரானில் சாராயம் குடித்த 300 பேர் பலியாகிவிட்டனர். 1000 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் உள்ளனர்.

குமட்டல்
இந்த மெத்தனால் எந்தவித வாசனையையும் சுவையையும் தராது. இது உடல் உறுப்புகளை செயலிழக்க வைக்கும், மூளையை சேதமடையச் செய்யும். இதற்கான அறிகுறிகளாக மார்பு வலி, கண் பார்வை இழத்தல், கோமா நிலைக்கு செல்லுதல், குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். சாலைகளில் கூட இந்த சாராயங்கள் எளிதில் கிடைக்கின்றன என்கிறார்கள்.

300 பேர் பலி
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் எரிச் சாராயம் குடித்தால் அது ஜீரண மண்டலத்தை சுத்தப்படும் என வதந்தியை பரப்பியுள்ளனர். இதை நம்பி சாராயம் குடித்த 300 பேர் பலியாகிவிட்டனர் என்றார். இது போல் மெத்தனால் கலந்து சாராயத்தை குடித்துவிட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை 768 பேர் பாதிக்கப்பட்டனர். 76 பேர் பலியாகிவிட்டனர்.

ஆலைகள்
இதையடுத்து 4200 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஈரான் நாட்டில் சாராயம் குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி குடித்தால் அபராதம் விதிக்கப்படும். 1979 ஆம் ஆண்டு முதல் ஈரானில் உள்ள சாராய தொழிற்சாலைகள் மருத்துவ தேவைகள் மற்றும் சானிடைசர்கள் தயார் செய்யும் ஆலைகளாக மாறிவிட்டனர். மற்ற ஆலைகள் மூடப்பட்டு அப்படியே கிடக்கிறது.
-
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
ஈரானும் ஊரானும் வாழட்டும்! நீங்க எந்த கட்சி அமெரிக்காவா? ஈரானா? தனது ஸ்டைலில் கமல் சொன்ன வார்த்தை! -
இருளில் மூழ்கும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியால் 48 மணிநேர கெடுவுடன் டிரம்ப் மிரட்டல்! ஷாக் அறிவிப்பு -
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
"ஈரானுக்கு ஆதரவு".. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்!












Click it and Unblock the Notifications