இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை கைப்பற்றுவேன் - சொல்வது பெனாசிர் மகன் பிலாவல் பூட்டோ!!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: காஷ்மீர் பாகிஸ்தான் ஒரு பகுதி.. இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை கைப்பற்றுவேன் என்று பெனாசிர் பூட்டோவின் மகனும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி பேசியிருப்பது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் வெள்ளம் பாதித்த பஞ்சாப் மாகாணத்தில் தமது கட்சி நிர்வாகிகளிடம் ஏற்று பிலாவல் பேசுகையில், காஷ்மீரின் அனைத்து பகுதிகளுமே பாகிஸ்தானுக்குச் சொந்தமானது. காஷ்மீரை நான் மீட்பேன். இந்த மண்ணின் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுத்தர முடியாது. இதர மாகாணங்களைப் போல அதுவும் காஷ்மீரத்தின் ஒரு பகுதியே என்று சபதம் போட்டுப் பேசினார்.
பிலாவல் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் யூசுப் கிலானி, பர்வேஸ் அஸ்ரப் ஆகியோரும் கலந்து கொண்டனர். பிலாவலின் பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications