3 மணி நேரம் நடைபெற்ற குடல் அறுவை சிகிச்சை... போப் ஆண்டவர் உடல்நிலையில் முன்னேற்றம்..!
ரோம்: குடல் அறுவை சிகிச்சைக்கு பிறகு போப் ஆண்டவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வாடிகன் செய்தி தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் குடலில் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரோம் நகரில் ஜெமெல்லி மருத்துவமனையில் அவருக்கு குடல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. போப் ஆண்டவர் உடல்நிலை மீது மருத்துவர்கள் குழு தீவிர கவனம் செலுத்தியதோடு 3 மணி நேரத்துக்கும் மேலாக அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
84 வயதான போப் ஆணடவர் பிரான்ஸிஸ்க்கு வயது மூப்பு காரணமாக ஸ்பாண்டிலிடிஸ் எனப்படும் கீழ் முதுகு வலியும் உள்ளது. இதற்கு அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே போப் ஆண்டவர் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்தியோ புருனி, போப் ஆண்டவர் விரைந்து குணம் அடைந்து வருவதாகவும், உணவு உட்கொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அறுவைச் சிகிச்சைக்கு பிறகு நேற்று முதல்முறையாக சிறிதளவு நடைபயிற்சியும் செய்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இன்னும் ஒரு சில நாட்கள் ஜெமெல்லி மருத்துவமனையிலேயே தங்கி போப் ஆண்டவர் ஓய்வெடுப்பார் என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications