ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி SputnikV - இந்தியா உட்பட 20 நாடுகள் 100 கோடி தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தமாம்
மாஸ்கோ: தாம் கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பூசியை சர்வதேச சந்தையில் பயன்படுத்தும் வகையில் Sputnik V என பெயரிட்டிருக்கிறது ரஷ்யா. இந்த தடுப்பூசியை பெற இந்தியா உட்பட 20 நாடுகள் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
Recommended Video
உலக நாடுகளை 8 மாதங்களாக ஆட்டிப் படைத்து பேரழிவை உருவாக்கி வருகிறது கொரோனா வைரஸ். உலக நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்.

இதனிடையே உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் படுதீவிரமாக களமிறங்கி உள்ளன. இதில் ரஷ்யா அதிதீவிரமான முயற்சிகளை வெளிப்படுத்தியது. இது மிகப் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
இந்த நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என்று ரஷ்யா அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமது மகள்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் புதின் அறிவித்திருந்தார்.
இதனிடையே ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தங்களது தடுப்பூசியை பெற இந்தியா உட்பட 20 நாடுகள் ஆர்வமாக இருக்கின்றன; 100 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளுக்கு ஆர்டர் தர ஒப்பந்தம் செய்துள்ளன என தெரிவித்துள்ளது.
மேலும் சர்வதேச சந்தைக்காக இந்த தடுப்பூசிக்கு Sputnik V (ஸ்புட்னிக்-V) எனவும் ரஷ்யா பெயரிட்டிருக்கிறது. இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து தயாரித்துள்ளது.
முந்தைய சோவியத் யூனியனானது விண்வெளிக்கு அனுப்பிய முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக். இதன்பிறகே உலக நாடுகளிடையே விண்வெளி பயணம் குறித்த போட்டியே உருவானது. தற்போது உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கும் அதே ஸ்புட்னிக்கின் பெயரை ரஷ்யா சூட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications