பாகிஸ்தானை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்.. லாகூர், இஸ்லாமாபாத்தை தாக்கும் இந்தியா! கடும் அட்டாக்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை வானிலேயே நம் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் தாக்கி அழித்து தள்ளியது. மேலும் பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இருநாடுகள் இடையேயான பதற்றம் என்பது அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதலை இந்தியா தொடங்கி உள்ளது. பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் சியால்கோட்டை நோக்கி நம் நாடு ஏவுகணைகளை வீசி பதிலடி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் மீது நம் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் நம் நாட்டின் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.

இந்த தாக்குதல் ரேடார் உள்பட வான்வெளி ஏவுகணை தடுப்பு சாதனங்கள் மூலம் நம் நாடு முறியடிக்கப்பட்டதோடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி உள்பட பல முக்கிய நகரங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில்
பாகிஸ்தான் நிலைக்குலைந்து போய் உள்ளது. இதற்கிடையே தான் இன்று இரவு ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது.
இந்த தாக்குதல்களை நம் நாடு வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்கள் வானிலேயே இடைமறித்து அழித்தன. மேலும் பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் மின்விளக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் முப்படை தளபதிகளும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி பாகிஸ்தானின் லாகூர், சியால்கோட், இஸ்லாலமாபாத் மற்றும் கராச்சி உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.. நம் நாட்டில் இருந்து ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை பதம் பார்த்தது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications