"கம்போடியாவில் விஷ்ணு சிலை தகர்ப்பு.." தாய்லாந்து ராணுவம் அடாவடி.. உச்சக்கட்ட பதற்றம்
புனோம் பென்: தெற்காசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த சில காலமாகவே மோதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதற்கிடையே அங்கு கம்போடியாவில் உள்ள மிக பெரிய விஷ்ணு சிலை ஒன்று இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. தாய்லாந்து தரப்பே இந்தச் செயலை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செயலுக்கு இந்தியா உட்பட பல்வேறு தரப்பினும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களாகவே தெற்காசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மோதல் இருந்து வருகிறது. இரு தரப்புமே எல்லையில் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வந்தன. இதனால் எல்லையில் இருக்கும் கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் போர் வெடிக்கும் சூழலும் கூட ஏற்பட்டது. 16 நாட்கள் நீடித்த இந்த கடுமையான மோதல்களில் இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

விஷ்ணு சிலை இடிப்பு
இதற்கிடையே தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதலில், சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள விஷ்ணு சிலை ஒன்றை தாய்லாந்து இடித்துவிட்டதாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளிடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
என்ன நடந்தது!
இது தொடர்பாகப் பிரியா விஹியர் செய்தித் தொடர்பாளர் லிம் சான்பன்ஹா கூறுகையில், "கம்போடியாவின் செஸ் பகுதியில் அமைந்துள்ள விஷ்ணு சிலை இடிக்கப்பட்டது. இந்தச் சிலை 2014ல் கட்டப்பட்டது. தாய்லாந்து எல்லையிலிருந்து சுமார் 100 மீட்டர் (328 அடி) தொலைவில் உள்ள இந்த சிலை கடந்த திங்கள்கிழமை தகர்க்கப்பட்டது.. பௌத்த, இந்து மதத்தினரால் இந்த சிலை வணங்கப்பட்டு வந்தது. அப்படியிருக்கும்போது இதை இடித்ததை ஏற்க முடியாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.
தாய்லாந்து அரசே இந்தச் சிலையை இடித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த விவகாரத்தில் தாய்லாந்து இதுவரை மவுனமாகவே இருக்கிறது. எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.
கம்போடியா
'பேக்ஹோ லோடர்' மூலம் விஷ்ணு சிலை இடிப்பதைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சிலர் இது ஏஐ வீடியோவாக இருக்கலாம் என முதலில் குறிப்பிட்டனர். இருப்பினும், இது ஏஐ வீடியோவாக இருக்க வாய்ப்பில்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்து மற்றும் பௌத்தர்களால் வணங்கப்படும் இச்சிலை ஒரு வழிபாட்டுத் தலம் என கம்போடியா கூறியுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க தாய்லாந்து, கம்போடியா இடையே போர் நிறுத்தம் கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. ராணுவ அதிகாரிகள் இந்த போர்நிறுத்தத்தையில் இறங்கியுள்ளனர். தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் சூரசாந்த் கொங்சிரி இதை உறுதிப்படுத்தினார். இந்த அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா கண்டனம்
இந்த சம்பவத்திற்கு இந்தியா புதன்கிழமை வன்மையான கண்டனம் தெரிவித்தது. ராணுவ மோதல்கள் இருந்தாலும், உலகெங்கிலுமுள்ள பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய அவமரியாதையான செயல்கள் நடக்கவே கூடாது என்று இந்தியா வலியுறுத்தியது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்து மற்றும் பௌத்த மக்கள் அந்தச் சிலையை வழிப்பட்டு வந்தனர். அதை இதுபோல இடித்ததை ஏற்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications