ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர் தேர்தலில் இந்தியா வெற்றி- 8வது முறையாக இடம்
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரம் இல்லாத உறுப்பினர் இடத்துக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரம் இல்லாத உறுப்பினராக 8-வது முறை இந்தியா இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமல்லாத உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிரந்தரம் இல்லாத உறுப்பினர்கள் இடங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படும்.

இந்த தேர்தலில் ஆசிய பசிபிக் குழுவின் வேட்பாளராக இந்தியா போட்டியிட்டது. மொத்தம் 55 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தன. இதனால் இந்தியா வெல்வது உறுதியாகி இருந்தது.
இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. இரவு 11 மணிவரை இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா சபையில் முதல் முறையாக சமூக இடைவெளியுடன் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்தியா பதிலடி.. சீனாவின் முக்கிய அதிகாரி உட்பட 35 ராணுவ வீரர் பலி.. அமெரிக்க உளவுத்துறை தகவல்
பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 192 நாடுகளில் 184 நாடுகளின் வாக்குகளை இந்தியா பெற்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரம் இல்லாத உறுப்பினராக 8-வது முறை இந்தியா இடம்பெற்றுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு இந்தியா 187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது இந்தியா. 2011-ம் ஆண்டு 7-வது முறையாக நிரந்தரமல்லாத உறுப்பினராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றது. இதற்கு முன்னர் 1950-51; 1967-68; 1972-73; 1977-78; 1984-1985; 1991-1992 ஆகிய ஆண்டுகளிலும் நிரந்தரமல்லாத உறுப்பினர் நாடாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றிருந்தது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications