ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர் தேர்தலில் இந்தியா வெற்றி- 8வது முறையாக இடம்
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரம் இல்லாத உறுப்பினர் இடத்துக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரம் இல்லாத உறுப்பினராக 8-வது முறை இந்தியா இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமல்லாத உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிரந்தரம் இல்லாத உறுப்பினர்கள் இடங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படும்.

இந்த தேர்தலில் ஆசிய பசிபிக் குழுவின் வேட்பாளராக இந்தியா போட்டியிட்டது. மொத்தம் 55 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தன. இதனால் இந்தியா வெல்வது உறுதியாகி இருந்தது.
இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. இரவு 11 மணிவரை இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா சபையில் முதல் முறையாக சமூக இடைவெளியுடன் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்தியா பதிலடி.. சீனாவின் முக்கிய அதிகாரி உட்பட 35 ராணுவ வீரர் பலி.. அமெரிக்க உளவுத்துறை தகவல்
பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 192 நாடுகளில் 184 நாடுகளின் வாக்குகளை இந்தியா பெற்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரம் இல்லாத உறுப்பினராக 8-வது முறை இந்தியா இடம்பெற்றுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு இந்தியா 187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது இந்தியா. 2011-ம் ஆண்டு 7-வது முறையாக நிரந்தரமல்லாத உறுப்பினராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றது. இதற்கு முன்னர் 1950-51; 1967-68; 1972-73; 1977-78; 1984-1985; 1991-1992 ஆகிய ஆண்டுகளிலும் நிரந்தரமல்லாத உறுப்பினர் நாடாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றிருந்தது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
சிவகார்த்திகேயனுக்கு சனி பிடித்துவிட்டது.. நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு.. மீண்டும் சிக்கிய தவெக -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications