போதை மருந்து கொடுத்து 5 கொரிய பெண்கள் பலாத்காரம்.. பாஜக முன்னாள் பிரமுகர் மீது புகார் நிரூபணம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவத்தில் குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது.
பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்களின் முன்னாள் தலைவராக இருந்தவர் பலேஷ் தன்கர். 43 வயதாகும் இவர் 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது. அவர்கள் மயங்கி தள்ளாடியதை பயன்படுத்திக் கொண்ட பலேஷ் அவர்களை பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இவர் மீது ஏராளமான பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுடன்தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து தனது செல்போனில் வைத்திருந்தாராம். அதை போலீஸார் கைப்பற்றினர்.
அந்த வீடியோக்களில் பலேஷ் தன்னை நம்பி வரும் பெண்களுக்கு போதை மருந்தை கொடுக்கிறார். அதில் மயங்கும் பெண்களை பலாத்காரம் செய்கிறார். பின்னர் அலாரம் கடிகாரம் மற்றும் செல்போன் ஆகியவற்றின் பின்புறம் மறைத்து வைத்திருந்த தனது கேமராவில் வீடியோவும் எடுத்துக் கொள்கிறார். அவ்வாறு போலீஸார் ஏராளமான வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர்.
அந்த வீடியோக்களில் ஒரு வீடியோவானது 95 நிமிடங்களுக்கு ஓடக் கூடியது. அதில் மயங்கி கிடந்த பல பெண்களுடன் பலேஷ் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது 39 வழக்குகள் அவர் மீது தனித்தனியே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் கண்கலங்கினார். மேலும் பல்வேறு பொய்களை கூறி 5 கொரிய பெண்களை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உறுதியாகியுள்ளது என தீர்ப்பளித்தனர். இவர் மே மாதம் மீது ஆஜர்படுத்தப்படுவார்.
இதன் பிறகு இந்த ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து பலேஷிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தியதில் அவர் அழுதபடியே நான் பெண்களிடம் நிறைய பொய்களை கூறியுள்ளேன். எனது திருமண வாழ்க்கை கசப்பாக இருந்ததால் நான் வேறு ஒருபெண்ணுடன் தொடர்பில் இருந்தேன்.
ஆனால் அந்த பெண்ணும் என்னை ஒரு சிறிய பிரச்சினைக்காக விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் நான் தனிமையில் வாடியதால் பெண்களிடம் நான் பொய் கூறியதாக கண்ணீர் மல்க கூறினார். சில நேரங்களில் மயக்கமடையும் பெண்களை பலாத்காரம் செய்யும் பலேஷ் பல சமயங்களில் போதை மருந்து கொடுத்து மயங்காத பெண்களை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.
பலேஷ் கொரிய பெண்களை பலாத்காரம் செய்து எடுத்த வீடியோக்களை தனித்தனியே ஃபோல்டர் போட்டு வைத்த்துள்ளார். அதில் சம்பந்தப்பட்ட கொரிய பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்தான் என்று பலேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் மயக்கத்தில் இருப்போரையும் தள்ளாடியபடி இருப்போரையும் எதுவும் செய்ய முடியாது என்றும் பலேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பலேஷ் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். இந்த சம்பவத்தை விவரித்த நாளேடுகள் ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமான பாலியல் குற்றவாளிகளில் பலேஷும் ஒருவர் என விவரித்துள்ளன.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications