ஆட்டி விட அன்னை வேண்டாம்... தானியங்கி தொட்டிலை வடிவமைத்த மஸ்கட் வாழ் இந்தியர்
மஸ்கட்: ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் மெக்கானிக்காக பணியாற்றும் இந்தியர் ஒருவர் ஆளில்லாமல் தானே ஆடும் தானியங்கி தொட்டிலை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
அரைமணி நேரம், ஒரு மணி நேரம் என்று நேரம் செட் செய்து வைத்து விட்டால் அந்த நேரம் வரை இந்த தானியங்கி தொட்டில் தங்கு தடையின்றி ஆடிக் கொண்டிருக்கும்.

அந்த நேரம் கழிந்த பின்னர் குழந்தையின் சிணுங்கல் அல்லது அழுகுரல் கேட்டால் மீண்டும் தானாகவே தொட்டில் ஆடத் தொடங்கி விடும்.
தூங்க வைக்க கஷ்டம்:
இந்த யோசனை எப்படி தோன்றியது என்பது தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் மாதவன் என்ற அந்த மெக்கானிக் கூறியதாவது, "நாள்தோறும் வீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள பெண்கள் குழந்தை வளர்ப்பிலும், குழந்தைகளை தொட்டிலில் இட்டு, தாலாட்டி தூங்க வைப்பதிலும் அதிக நேரத்தை செலவிட்டு, சிரமப்படுவதை எங்கள் ஊரில் நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
தாய்மார்களின் பணிச்சுமை:
தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கும் விதமாக ஒரு தானியங்கி தொட்டிலை தயாரிக்க முடிவு செய்தேன். எனது மெக்கானிக் தொழில் அனுபவத்தின் மூலம் இயந்திரவியல் ஓரளவுக்கு அத்துப்படியாக இருந்தது.
மின்விசிறிக்கான மின்சாரம்:
நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு, சுமார் 5 ஆண்டு தீவிர முயற்சியின் பலனாக இந்த தொட்டிலை உருவாக்கினேன்.இந்த தொட்டிலை இயக்க ஒரு மின் விசிறிக்கு செலவாகும் மின்சாரமே போதுமானதாகும்.
மலிவு விலையில் கிடைக்கும்:
தற்போது, உலோகத்தால் செய்திருக்கும் இந்த தானியங்கி தொட்டிலை, விரைவில், "ஃபைபரில்" தயாரிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறேன்.அப்போது, அனைத்து தாய்மார்களும் இந்த தானியங்கி தொட்டிலை மலிவான விலையில் வாங்கி பயனடைய முடியும்" என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications