ஒரு கையில் குழந்தை, மறுகையில் ஏகே 47... ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த இந்தியர்!
லண்டன்: ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வரும் இந்தியர் ஒருவர் ஒரு கையில் ஏகே 47 துப்பாக்கியையும், மற்றொரு கையில் புதிதாக பிறந்த தனது குழந்தையையும் ஏந்தியவாறு டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனில் சித்தார்த்தா என்ற 31 வயது இளைஞர் உட்பட 8 பேர் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறி கைது செய்யப் பட்டனர். பின்னர் பெயிலில் வெளியே வந்த அவர்கள், மீண்டும் டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப் பட்டது.

ஆனால், கர்ப்பமாக இருந்த தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் லண்டனை விட்டு வெளியேறினார் சித்தார்த்தா. பஸ் மூலம் பாரீஸ் புறப்பட்டுச் சென்று, பின் அங்கிருந்து சிரியா போய் விட்டார்.
இந்நிலையில், சித்தார்த்தா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில், ஒரு கையில் ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தியவாறும், மறுகையில் தனக்கு புதிதாக பிறந்த குழந்தையை ஏந்தியவாறும் சித்தார்த்தா போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படத்தின் கீழே, ‘தனது மகன் இஸ்லாம் நாட்டில் வளர்வது பெருமையாக உள்ளதாக' சித்தார்த்தா எழுதியுள்ளார்.
இதன்மூலம், சித்தார்த்தா தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சிரியாவில் நடைபெறும் போரில் ஈடுபட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, மதம் மாறிய சித்தார்த்தா தன்னுடைய பெயரை, அபு ருமேசாஹ் என்று மாற்றிக் கொண்டதாகவும், தொலைக்காட்சிகளில் இந்த பயங்கரவாத அமைப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications