மனித உரிமை மீறலுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால்.... இலங்கையை எச்சரிக்கும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

International community patience on Sri Lanka could wear thin: US
வாஷிங்டன்: மனித உரிமை மீறல் பற்றி இலங்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிஷா தேசாய், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இலங்கை அரசிடம் சர்வதேச நாடுகள் காட்டும் பொறுமை குறைந்து விடும்.

குறிப்பாக, பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தனது சொந்தமான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். தனது சொந்த நடைமுறைகளின் ஊடாக, இலங்கை இந்த விவகாரங்களுக்குப் பதிலளிக்கும் என்பதையே நாம் விருப்புடன் எதிர்பார்க்கிறோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கையினால் அதனைச் செய்யமுடியும் என்று நம்புகிறோம். உண்மையான முன்னேற்றம் இல்லாவிட்டால், அனைத்துலக சமூகத்தின் பொறுமை குறைந்து போகத் தொடங்கி விடும்" என்றார்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று உலகநாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+