புத்தாண்டு வெடி? பாக். குண்டு வெடிப்பு- கந்தகார் விமான கடத்தல் பயங்கரவாதி மவுலானா மசூத் அசார் பலி?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புத்தாண்டு நாளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சர்வதேச பயங்கரவாதியும் 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தகாருக்கு கடத்தப்பட்ட சம்பவத்தின் மூளையுமான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் (மெளாலானா மசூத் அசார்) கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் அண்மை காலமாக இந்தியாவில் நாசவேலைகளை நடத்திய பல பயங்கரவாதிகள் அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்களில் பலியாகி வருகின்றனர். இந்தியாவால் தேடப்படுகிற ஹபீஸ் சயீத் மகன் உள்ளிட்ட பல பயங்கரவாதிகள் கடத்தப்பட்டும் மர்ம நபர்களால் சுடப்பட்டும் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் இந்த விவகாரங்களில் கனத்த மவுனம் சாதித்து வருகிறது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை உருவாக்கி இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கிய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் நிறுவனரும் 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கடத்தியவருமான சர்வதேச பயங்கரவாதி இன்று பாகிச்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் பவல்பூர் மசூதி ஒன்றில் இருந்து மவுலானா மசூத் அசார் திரும்பி வரும் போது அவர் மீது சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதாகவும் இந்த குண்டுகள் வெடித்து மவுலானா மசூத் அசார் பலியானதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் மவுலானா மசூத் அசார். காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற பயங்கரவாத கோட்பாட்டை மையமாக வைத்து ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை உருவாக்கியவர் அசார்.
ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வந்த மவுலானா மசூத் அசார் பாதுகாப்பு படையினரால் 1999-ல் கைது செய்யப்பட்டு காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டார். மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கொண்டு செல்லப்பட்டது. 5 நாட்களுக்கு பின்னர் மசூத் அசார் உட்பட 3 பயங்கரவாதிகள், ஒப்படைக்கப்பட்ட பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விடுவிக்கப்பட்டது. அப்போது பிரதமராக பாஜகவின் வாஜ்பாய் இருந்தார். 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலின் மூளையாவும் மவுலானா மசூத் அசார் செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
தேன்கூடு ஈரான்.. பாகிஸ்தான் செய்ய போகும் பெரிய உதவி.. இஸ்லாமாபாத் வரும் அமெரிக்க 'மாப்பிள்ளை' -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?











Click it and Unblock the Notifications