Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு வெடி? பாக். குண்டு வெடிப்பு- கந்தகார் விமான கடத்தல் பயங்கரவாதி மவுலானா மசூத் அசார் பலி?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புத்தாண்டு நாளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சர்வதேச பயங்கரவாதியும் 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தகாருக்கு கடத்தப்பட்ட சம்பவத்தின் மூளையுமான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் (மெளாலானா மசூத் அசார்) கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் அண்மை காலமாக இந்தியாவில் நாசவேலைகளை நடத்திய பல பயங்கரவாதிகள் அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்களில் பலியாகி வருகின்றனர். இந்தியாவால் தேடப்படுகிற ஹபீஸ் சயீத் மகன் உள்ளிட்ட பல பயங்கரவாதிகள் கடத்தப்பட்டும் மர்ம நபர்களால் சுடப்பட்டும் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் இந்த விவகாரங்களில் கனத்த மவுனம் சாதித்து வருகிறது.

International Terrorist Masood Azhar killed in Pakistan bomb blast?

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை உருவாக்கி இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கிய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் நிறுவனரும் 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கடத்தியவருமான சர்வதேச பயங்கரவாதி இன்று பாகிச்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் பவல்பூர் மசூதி ஒன்றில் இருந்து மவுலானா மசூத் அசார் திரும்பி வரும் போது அவர் மீது சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதாகவும் இந்த குண்டுகள் வெடித்து மவுலானா மசூத் அசார் பலியானதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் மவுலானா மசூத் அசார். காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற பயங்கரவாத கோட்பாட்டை மையமாக வைத்து ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை உருவாக்கியவர் அசார்.

ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வந்த மவுலானா மசூத் அசார் பாதுகாப்பு படையினரால் 1999-ல் கைது செய்யப்பட்டு காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டார். மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கொண்டு செல்லப்பட்டது. 5 நாட்களுக்கு பின்னர் மசூத் அசார் உட்பட 3 பயங்கரவாதிகள், ஒப்படைக்கப்பட்ட பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விடுவிக்கப்பட்டது. அப்போது பிரதமராக பாஜகவின் வாஜ்பாய் இருந்தார். 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலின் மூளையாவும் மவுலானா மசூத் அசார் செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+