அமெரிக்க தூதரகம் நோக்கி பாய்ந்த ராக்கெட்.. ஈராக்கில் உச்சக்கட்ட பதற்றம்! ஆட்டத்தை தொடங்கிய ஈரான்
பாக்தாத்: ஈராக் தலைநகர், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி, ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதலை நடத்தியிருக்கின்றன. இதில் தூதரகம் சேதமடைந்திருக்கிறது.
அமெரிக்காவுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் உள்ள அமெரிக்காவின் சொத்துக்கள் மீது ஈரான் சரமாரியாக தாக்குதலை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த தாக்குதலும் நடந்திருக்கிறது.

ஈரானின் பதிலடி
ஈரானை அடிபணிய வைக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆனால், பிடி கொடுக்காமல் ஈரான் நழுவவே.. இஸ்ரேலுடன் சேர்ந்துக்கொண்டு அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர், காமெனி கொல்லப்பட்டார். இதற்கு ஈரான் வரிசையாக ஏவுகணைகளை வீச பதிலடி கொடுக்க தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதலில் அமெரிக்காவின் சொத்துக்கள் குறி வைக்கப்பட்டிருக்கின்றன.
ஈரான் ஆதரவு படைகள் தாக்குதல்
குறிப்பாக ஈரான் ஆதரவு படைகள், இன்று காலை பாக்தாத்தின் 'கராடா' பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஏவுகணைகளை வீசியிருக்கின்றன. 'பாப்புலர் மொபிலைசேஷன் ஃபோர்ஸ்' எனும் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்த அமைப்பின் முக்கிய தளபதிகள் இருவர் கொல்லப்பட்டனர். எனவே, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
ஜர்க் ஆன அமெரிக்கா
இந்த தாக்குதலை ஈரான் செய்தி ஊடகமான பிரஸ் டிவி உறுதி செய்திருக்கிறது. தற்கொலை டிரோனை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், தாக்குதலில் தூதரகத்தின் ஹெலிபேட் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தூதரகத்திலிருந்து தீ பிழம்பு மற்றும் கரும் புகை வரும் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன.
பாதுகாப்பான பகுதி
விஷயம் என்னவெனில், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி 'கிரீன் ஜோன்' ஆகும். அதாவது இந்த பகுதிக்குள் எந்த ஏவுகணையும் தாக்குதல் நடத்த முடியாது. உலகின் மிகவும் பாதுகாப்பான பகுதிகளில் இது ஒன்றாக இருக்கிறது. அப்பேற்பட்ட பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
நல்வாய்ப்பாக தாக்குதலில் யாரும் உயிரிழக்கவோ, காயமடையவோ இல்லை. ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து, தூதரகத்திற்கு லெவல் 4 பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்லாமாபாத்தில் இனிப்பு பேச்சு.. ஹார்முஸ் ஜலசந்தியில் சத்தமே இல்லாமல் சம்பவம்.. ட்ரம்ப் அதிரடி -
உச்சக்கட்ட பரபரப்பில் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்க தலைகள் லிஸ்ட் ரெடி.. யாரெல்லாம் வராங்க? -
மீண்டும் வெடிக்கும் போர்? ஹார்முஸ் அருகே அமெரிக்காவின் ₹1,600 கோடி ட்ரோன் மாயம்.! உச்சக்கட்ட பதற்றம் -
நடுவில் பாகிஸ்தானை வைத்து.. ஈரானிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா! அடுத்து என்ன நடக்கும்? -
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
மினாப் 168: ரத்தத்தில் மூழ்கிய புத்தகம், ஷூ, ஸ்கூல் பேக்.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரானின் செயல்! -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
ஹர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த புதிய யுக்தி! வியூகத்தை மாற்றிய ஈரான்! சுப்ரீம் லீடர் கொடுத்த மெசேஜ்! -
ஈரான் ஆடிய ஆட்டம்.. சவுதி அரேபியாவின் மோசமான நிலை.. போர் முடிந்த பின் வெளியான உண்மை! -
ஒப்பந்தம் ஏற்படாமல் போகட்டு, அப்புறம் இருக்கு.. பேச்சுவார்த்தைக்கு முன்பே ஈரானை மிரட்டும் அமெரிக்கா -
ஈரானுக்கு ரகசிய ஆயுத சப்ளை செய்யும் சீனா.. ஆனா ரூட்டு வேற.. கொந்தளிக்கும் அமெரிக்க உளவுத்துறை! -
விண்டோஸை தூக்கி எறியும் பிரான்ஸ்... அமெரிக்காவிற்கு பயப்படுகிறதா.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications