மண்டையை சொரியும் டிரம்ப்.. ஈரான் செய்த சம்பவம்! இந்தியாவுக்கு இன்னும் சிக்கல் தீரலையே
தெஹ்ரான்: ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை தகர்த்த அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் ஈரான் தனது புதிய ஏவுகணையை வெளியிட்டிருக்கிறது. இப்படி நடந்திருப்பது ஈரானுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வந்ததற்கு காரணமே சர்வதேச அழுத்தம்தான். மறுபுறம் ஏவுகணை உருவாக்கப்பட்டிருப்பது தனது பாதுகாப்புக்குதான் என ஈரான் கூறியிருக்கிறது.

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் தனது புதிய ஏவுகணையை நேற்று வெளியிட்டிருக்கிறது. 'காசிம் பாசிர்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் தன்மை கொண்டது. அதாவது பாலிஸ்டிக் வகையை சேர்ந்தது. இது திட எரிபொருளில் இயங்கும். பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசிர்சாதே கூறுகையில்,
"துல்லியமான வழிக்காட்டல் அமைப்பை கொண்டு இயங்கும் இந்த ஏவுகணை இலக்கை சரியாக தாக்கும் திறன் கொண்டது. இடைமறிப்புகளால் இதை தடுக்க முடியாது என்பது கூடுதல் சிறப்பு. ஜிபிஎஸ் கருவி இல்லாமலேயே இது இயங்கும். ஏப்.17ம் தேதி இதை சோதித்து பார்த்தோம். எதிர்பார்ப்புகளை இது பூர்த்தி செய்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
ஈரானுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்க அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கும் நேரத்தில் இந்த ஏவுகணை பற்றிய தகவல் வெளியாகியிருப்பது டிரம்ப்பை நிச்சயம் சூடாக்கும். இப்படி நடப்பது இந்தியா-ஈரான் இடையே வர்த்தக சிக்கலை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.
இஸ்லாமிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே காலம் காலமாக பஞ்சாயத்து நீடித்து வருகிறது. குறிப்பாக ஈரானுடன் அமெரிக்காவின் பஞ்சாயத்து நெடியது. ஈரானில் எண்ணெய் வளம் அதிகம். அதை வைத்து பிழப்பு நடத்திகொண்டிருந்தது அந்நாடு. மறுபுறம் அமெரிக்காவின் தலைமையை ஏற்க மறுத்தது. எனவே இரு நாடுகளுக்கும் முட்டல் மோதல்கள் வெடித்தன. மூன்றாம் நாடுகள் பஞ்சயாத்தை பேசி தீர்க்க முன் வந்தன. அதன்படி ஈரான்-அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக ஈரானின் எண்ணெய் மற்றும் அதன் தயாரிப்புகளை உலக நாடுகள் வாங்கிக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம் கூறியது. எல்லாம் ஓகேவாக போய்க்கொண்டிருந்தபோதுதான் டிரம்ப் எனும் கலகக்காரர் உள்ளே நுழைந்தார். 2018ல், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். மட்டுமல்லாது ஈரானின் எண்ணெய்யை வாங்கும் நாடுகளுக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
இந்த இடத்தில்தான் இந்தியா மிகுந்த பாதிப்பை சந்தித்தது. அதாவது ஈரானிலிருந்து 2019க்கு முன்னர் வரை நாம் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கியிருந்தோம். விலை குறைவு, தரம் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. அதேநேரம் சில சலுகைகளும் கிடைத்தன. மட்டுமல்லாது ஈரானிலிருந்து எண்ணெய்யை கொண்டுவருவது எளிது. இவை அனைத்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏறாமல் பார்த்துக்கொண்டன. இப்போது எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது.
மீண்டும் குறைய வேண்டும் எனில் சலுகை விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தால் சாத்தியமாகலாம். ஈரான் எண்ணெய் கிடைத்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும். ஆனால் அதற்கு ஈரான் மீது விதித்த தடையை அமெரிக்கா நீக்க வேண்டும். இப்போது ஏவுகணை தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருப்பதால் அமெரிக்கா தடையை நீக்க யோசிக்கும். சுற்றி வளைத்து பார்த்தால் இந்தியாவுக்குதான் இதனால் நெருக்கடி.
-
ஈரான் ராணுவம் மொத்தமா காலி! கெத்தாக சொன்ன டிரம்ப்! அடுத்த 5வது நிமிடத்தில் இஸ்ரேலுக்கு நேர்ந்த சோகம் -
படிச்சு, படிச்சு சொன்ன பென்டகன்.. சுத்தமா கேட்கலையே டிரம்ப்! இப்போ பாருங்க.. சொன்னபடியே ஆயிடுச்சு! -
திணறும் அமெரிக்கா - இஸ்ரேல்.. ஈரான் உச்ச தலைவர் கமேனியை காக்கும்.கருப்பு படை.. களமிறங்கிய NOPO -
Kharg Island: ஈரானின் ”மணிமகுடம்” அடிமடியிலேயே கைவைத்த அமெரிக்கா.. கார்க் தீவில் அப்படி என்னதான் இருக்கிறது? -
பற்றி எரியும் ஈரான்.. ஆனாலும் காற்றின் தரம் டெல்லியை விட சூப்பரா இருக்கே எப்படி? காரணம் இதுதான் -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
ஈரான் - அமெரிக்கா போர்.. நீங்கள் சாப்பிடும் மீன் உணவுகளை பாதிக்க போகுது! எப்படி தெரியுமா? -
எங்களின் இறை தூதுவர் வருகிறார்.. ஓப்பனாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. ஓ இதுக்குத்தான் அட்டாக்கா! -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
ஈராக்கில் விழுந்து வெடித்த அமெரிக்க விமானம்.. வேலையை காட்டிய ஈரான்! என்ன நடக்குது? -
லைவ் ஓடிக்கொண்டிருக்கும்போது.. கோட் சூட்-ஐ கழற்றிய பெண் செய்தியாளர்! தாய்லாந்து ஊடகம் செய்த சம்பவம் -
அமெரிக்க தாக்குதலில் பலியான ஈரான் பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு.. சீனா ரூ.1.6 கோடி நிதியுதவி










Click it and Unblock the Notifications