படைகளை குவித்து வருகிறது.. உளவுத்துறையும் எச்சரிக்கை தந்தது.. ஈரான் செயலால் பென்டகன் கடும் ஷாக்!
ஈரான் தங்கள் நாட்டின் எல்லையில் படைகளை குவித்து வருகிறது, ஈரான் முக்கியமான தாக்குதலுக்கு திட்டங்களை வகுத்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: ஈரான் தங்கள் நாட்டின் எல்லையில் படைகளை குவித்து வருகிறது, ஈரான் முக்கியமான தாக்குதலுக்கு திட்டங்களை வகுத்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஈரானை அமெரிக்கா மொத்தமாக உலக நாடுகளிடம் இருந்து தனித்து விட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அமெரிக்கா ஒரு வகையில் வெற்றிபெற்றுவிட்டது என்றும் கூறலாம்.
முதலில் ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தடை செய்தது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த காரணத்தால் அங்கு உள்நாட்டு போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆம் அங்கு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள்.

என்ன போர்
ஈரான் நாட்டில் அதிபர் ஹசன் ரவுஹானிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதமாக கடுமையாக போராடி வருகிறார்கள். ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி மீது அந்நாட்டு மக்கள் பல்வேறு விஷயங்களுக்காக கோபத்தில் இருக்கிறார்கள். அதில் முதல் விஷயம், அதிபர் ஹசன் ரவுஹானி ராணுவத்தின் மீது செலுத்தும் கவனத்தில் துளி கூட மக்கள் நலத்திட்டம் மீது செலுத்துவதில்லை.

என்ன பொருளாதாரம்
அங்கு நாளுக்கு நாள் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது, மக்கள் கடும் வறுமையில் உள்ளனர், என்று புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணமாக சவுதி உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகளும், அமெரிக்காவும்தான் என்று ஈரான் நினைக்கிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

என்ன எச்சரிக்கை
இது தொடர்பாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில், ஈரான் விரைவில் முக்கியமான தாக்குதல்களை நடத்த வாய்ப்புள்ளது. ஈரான் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. இதற்காக ஈரான் தீவிரமாக தயாராகி வருகிறது.

படைகள் குவிப்பு
இதற்காக ஈரான் தங்கள் படைகளை எல்லையில் குவித்து வருகிறது. நிறைய அளவில் அங்கு ஆயுதங்கள் இறக்கப்பட்டு வருவதாக எங்களுக்கு உறுதியான உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் ஈரான் ஏன் இப்படி செய்கிறது என்று முழுமையான விபரம் தெரியவில்லை. ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தி அருகேவும் படைகளை குவித்து வருகிறது.

என்ன எச்சரிக்கை
இது தொடர்பாக ஈரானுக்கு அமெரிக்க ராணுவம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈரான் நாங்கள் சொல்வதை செவி மடுத்து கேட்கவில்லை. இன்னும் சில நாட்களில் ஈரானில் என்ன விதமான பிரச்சனை வேண்டுமானாலும் நடக்கலாம், அனைத்திற்கும் அமெரிக்க படைகள் தயாராக இருக்கிறது என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
-
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு











Click it and Unblock the Notifications